Showing posts with label அறிந்ததும் அறியாததும். Show all posts
Showing posts with label அறிந்ததும் அறியாததும். Show all posts

அறிந்தும் அறியாததும் 7 - கோஹினூர் வைரத்தின் வரலாறு...

வைரங்களில் முதன்மையானது, விலை உயர்ந்ததும், புகழ் பெற்றதுமான வைரம் கோஹினூர் வைரம் ஆகும். இதை பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதன் வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வழியில்லை.

verumpaye

கோஹினூர் - என்றால் மலையளவு ஒளிவீச்சு என்று பொருள். இந்த விலைமதிப்பில்லா வைரத்திற்கு கோஹினூர் என்று பெயரிட்டவர் நாதிர்ஷா எனும் ஒரு பாரசீக மன்னன். 15 ம் நூற்றாண்டுகளிலையே இந்த வைரத்தின் மதிப்பு கேட்டால் பிரமிப்பூட்டுவதாக இருந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவளிக்க முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இந்தியாவின் ஆந்திராவிலிருந்து அலாவுதீன் கில்ஜி எனும் மன்னனின் தளபதி மாலிக் கபூரால் கைப்பற்றப் பட்டது. இங்கிருந்து தான் கொஹினூரின் நாடோடி வாழ்க்கை ஆரம்பமானது. பின்னர் இந்த வைரம் குவாலியர் மன்னர் விக்ரம் ஜித்தின் கைகளுக்கு சென்றது. மாமன்னர் பாபருடன் நடந்த போரில் டெல்லியை ஆண்ட இப்ரஹாம் லோடி என்ற மன்னனுடன் விக்ரம்ஜித்தும் இறந்து விட, உயிருக்கு பயந்த உறவினர்கள் வைரத்தை பாபரின் மகனான ஹீமானிடம் அன்பளிப்பாக கொடுத்தனர்.(ஹீமான் பேரரசர் அக்பரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது)

பின்னர் பாரசீக மன்னரான தாமஸ்ப் கைகளுக்கு சென்றடைந்தது. பிற்பாடு தட்சன பீட பூமியை ஆண்ட நிஜாம் ஷாவை அடைந்தது. புகழ் பெற்ற இந்த வைரமானது மீண்டும் பாபர், அக்பர் பரம்பரையில் வந்து இன்றளவும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

1739 ல் டெல்லியை சூறையாடி நாதிர்ஷா எனும் பாரசீக மன்னன் கைப்பற்றினான்.(கோஹினூர் என்ற பெயரும் நாதிர்ஷாவால் தான் வந்தது) பின்னர் இவன் பரம்பரைகளை அலங்கரித்த கோஹினூர் வைரத்தை இந்தியாவிலுள்ள பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும் ரஞ்சித்சிங் கைவசம் வந்தது. மெல்ல மெல்ல நுழைந்து மொத்த இந்தியாவையும் தங்கள் கைவசம் கொண்டுவந்த ஆங்கிலேயர்களின் கீழ் பஞ்சாப் போன பின் கோஹினூர் வைரம் சர்.ஜான்.லாரன்ஸ் கைகளை சென்றடைந்த பின் பிரிடீஷ் மகாராணி விக்டோரியாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது..



கோஹினூர் வைரம் மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, அது அதற்கு நிலையான இடமாகவும் மாறி இன்று வரை கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.


நம் தாய்நாட்டு சொத்தை இன்று யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள்..

அறிந்ததும் அறியாததும் 4 - "ஓசனிச்சிட்டு" (HUMMING BIRD)

"ஓசனிச்சிட்டு" பெயரை கேட்டாலே வித்யாசமா இருக்குதில்ல , ஆமாங்க நாம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அதிசயமான ஒரு பறவைங்க இந்த ஓசனிச்சிட்டு, அட அதுதாங்க HUMMING BIRD .



உலகத்திலுள்ள பறவை இனத்திலேயே மிக மிகச் சிறிய பறவை இந்த ஓசனிச்சிட்டுகள். இவை சிறகடித்துக்கொண்டே பூவிலிருந்து தேனை உறிஞ்சு வாழும். ஓசனிச்சிட்டு பேரினத்தில் 320 வகைகள் உள்ளன. ஓசனிச்சிட்டுகள் பறவை இனத்திலேயே மிக அதிக வகைகள் கொண்ட ஒரு பேரினமாகும்.



சுண்டு ஓசனிச்சிட்டு என்ற இவ்வினத்தைச் சேர்ந்த பறவை 5 செ.மீ நீளமே கொண்டுள்ளது, எடையும் 1.8 கிராம் மட்டுமே. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிக்கும். இந்த பறவை கியூபா நாட்டில் காணப்படுகிறது.

ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது பேரோசனிச்சிட்டு ஆகும். இந்த பேரோசனிச்சிட்டு 18-20 கிராம் எடையும் ஏறத்தாழ 21-22 செ.மீ நீளமும் கொண்டது. இவை நொடிக்கு 8-10 முறைகள்தான் இறக்கைகளை அடிக்கின்றன, இவ்வகை தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் ஈக்வெடோர் முதல் தெற்கே சிலி, அர்ஜென்டினா நாடுகள் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.
நடு எடை உள்ள ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 20-25 முறைகள் சிறகடிக்கின்றன.

இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது, இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது.




ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான மகரந்த சேர்க்கை நிகழ்கின்றது. ஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன.

பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.



ஹம்மிங் பறவை from Jayanth on Vimeo.

இந்த பகிர்வு உங்களை கவர்ந்திருந்தால் (இல்லையென்றாலும்) நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...

மீண்டும் சிந்திப்போம்...




அறிந்ததும் அறியாததும் 3 - தமிழிசை & தமிழிசைக் கருவிகள்

தினமும் புதிதாய் வந்து கொண்டிருக்கும் நவீன இசையை கேட்டு ரசித்து நாம் மறந்து போன தமிழனின் பாரம்பரிய இசை பற்றியும் , தமிழிசைக் கருவிகள் பற்றியும் இந்த பதிவு..



இசைகளிலேயே பழமையான இசை "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய தமிழுடன் பிறந்தது நம் தமிழிசை" .

உயிரும் உடம்பும் போன்றது நம் தமிழர்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு. தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு தாய் கருவுற்றால் நலுங்கு பாட்டு , குழந்தை பிறந்த்ததும் தாலாட்டுப் பாடல், சிறு வயதில் நிலாப்பாடல், இள வயதில் காதல் பாடல், திருமணத்திற்கு திருமணப் பாடல், மரணமடைந்ததால் ஒப்பாரிப் பாடல் என்று தமிழனின் வாழ்வு பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றியிருந்த்திருக்கிறது. (தற்போதைய காலகட்டத்தில் நலுங்குப் பாடல், தாலாட்டு, நிலாப்பாட்டு, திருமணப் பாடல், ஒப்பாரி என்று எதுவும் வழக்கத்தில் இருப்பதாக தெரியவில்லை, பழைய தமிழ் படங்களை தவிர வேறெங்கும் இவற்றை நான் பார்த்ததுமில்லை, இவற்றில் இன்று வழக்கத்தில் இருப்பது காதல் பாடல்கள் மட்டும் தான், திரைப்படங்களில் மட்டும்.)

இலக்கியங்கள் படைத்த தமிழும், இசையும் இன்று இல்லாமல் போகும் நிலையில்....


* தமிழிசைக் கருவி - வீணை


வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.


* தமிழிசைக் கருவி - யாழ்




யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.
பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.


* தமிழிசைக் கருவி - பறை



பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்.

பறை கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.


* தமிழிசைக் கருவி - தவில்


தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும்.



* தமிழிசைக் கருவி - உறுமி மேளம்




உறுமி மேளம் ஒரு கொட்டும் இசைக்கருவியாகும். தமிழ்நாட்டு நாட்டுப்புற இசையிலும், கோவில்களிலும் , தமிழிசையிலும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.


* தமிழிசைக் கருவி - மிருதங்கம்



மிருதங்கம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.
* தமிழிசைக் கருவி - மத்தளம்.



இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ்ப்பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இந்த மத்தளம். பலவையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும்.மத்தளத்தின் ஸ்ருதியை மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்ப்படுகிறது.


* தமிழிசைக் கருவி - முரசு




முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

முரசுகளில் வீர முரசு, தியாக முரசு, நியாய மிராசு என மூன்று வகை உண்டு. வீர முரசு போர்க்காலங்களில் பயன்படுத்தப்படும் முரசு, இந்த முரசி வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். தியாக முரசு என்பது வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு, நியாய முரசு என்பது நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

* தமிழிசைக் கருவி - பேரிகை

பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

* தமிழிசைக் கருவி - தமுக்கு
தமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் அரசாங்கம், நீதிமன்றம், கோயில்கள் போன்றவற்றின் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு அடிக்கும் ஒரு இசைக்கருவியாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


உங்களுக்கு அரிய தவல்கள் சொல்லும் அறிந்த்ததும் அறியாத்ததும் தொடரும் ...


இந்தியாவைப் பற்றி - அறிந்ததும் அறியாததும் பாகம் - 2




யேல் பல்கலைகழகத்தில் ( அமெரிக்கா ) டாக்டர் பட்டம் பெற்ற ஒரே தமிழர் அறிஞர் அண்ணாதுரை .

இந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்து பம்பாய் - குர்லா இடையே உண்டானது.

தமிழ்நாட்டில் தயாராகும் துணிகளில் 27 % கைத்தறி மூலமே உருவானது.

சென்னையில் டெலிவிஷன் நிலையம் 15 - 08 - 1975 ல் தொடங்கப்பட்டது.

மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானப் பயணம் செய்தது கிடையாது.

தமிழகத்தில் அதிசய இடங்களில் ஒன்றாக விளங்கி வருவது V . G . P தங்க கடற்கரையாகும்.

இந்தியாவில் அதிக அளவு அணைகள் உள்ள மாநிலங்கள் - மராட்டியம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா.

உலகிலேயே அதிக அளவு தபால் பட்டுவாடா செய்யும் நாடு இந்தியா .

தமிழ்நாட்டில் முதல் தொலைபேசி இணைப்பு வசதி கல்கத்தாவுக்கும் டைமண்ட் ஹார்பர் துறைமுகத்திற்கும் இடையே போடப்பட்டது.

குதுப்மினார் என்பதே மொகலாயர்களால் கட்டப்பட்ட கோபுரங்களில் மிகவும் உயரமானது.

பழங்கால கண்ணாடி மாளிகை ஓன்று பாண்டிச்சேரியில் உள்ளது.

1197 தீவுகள் இந்தியாவுக்கு சொந்தமாக உள்ளது.

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி என்பவர்.

தேசிய விருது பெற்ற முதல் தமிழ் கவிஞர் கவியரசு கண்ணதாசன்.

தமிழ்நாடு என்ற பெயரை சென்னைக்கு அளித்தவர் அறிஞர் அண்ணா .

நடிகராக இருந்து முதலமைச்சர் ஆனவர்கள் இந்தியாவை பொறுத்தவரை
- - என் . டி . ராமாராவ்
- - எம் . ஜி . ராமச்சந்திரன்
- - ஜெயலலிதா

ஆதிசங்கரர் பிறந்த ஊர் கேரளாவில் உள்ள காலடி .

..........................

பி . குறிப்பு :- இங்கே குறிப்பிட்டிருக்கும் செய்திகள் பத்து வருடங்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்டது. ஒருவேளை சில மாற்றங்கள் இருக்கலாம்.



................................................... பதிவுப் படம் ............................................