Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

ஒருத்தி..

பள்ளிக்கு முன்
பஸ் காத்து நிற்கிறார்கள்
இளம்பெண்கள்..

குடையிலும், கைப்பையிலும்,
செருப்பிலும், சீருடையிலும்
எத்தனை அடக்கியும்
தெறிக்கும் உடல்கள்..

வாக்கிலும், நோக்கிலும்
நிற்பிலும், நடப்பிலும்
எத்தனை மறைத்தும்
வெளித் தெரியும்
துடிக்கும் இதயம்...

நிறுத்தாமல் போகும்
பஸ்ஸுக்கு பின்னால்
ஓடித் திரும்புகின்றன
பதற்றம்
மையிட்ட கண்கள்..

இவர்களில் ஒருத்தி
வேலைக்கு போவாள்
குடும்பம் காப்பாள் ஒருத்தி
வழி தவறுவாள் பிறிதொருத்தி..

ஒருத்தி
கைக்குழந்தையுடன்
பஸ்ஸில் இருந்து
இவ்வழி செல்கையில்
அவள் படித்த பள்ளி என்று
கணவனுக்கு சுட்டுவாள்..

ஒருத்தி
அப்போதும்
அங்கேயே
பஸ்ஸுக்காகக் காத்து நிற்ப்பாள்..


**********
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் (மலையாள மொழிபெயர்ப்பு) என்ற கவிதை தொகுப்பில் பி.பி.ராமச்சந்திரன் அவர்கள் எழுதிய கவிதைகளில் நான் மிகவும் ரசித்த கவிதை இது..

பயந்த சுபாபம்....!




அவருக்கு கொஞ்சம்
பயந்த சுபாபம்....!
இருபதில் ஆரம்பித்த
காதலை
அறுபதில் தான்
அவளிடம் தெரியப்படுத்தினார்
மனைவி மூலமாக..



பள்ளி பருவத்தில் நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது..

இள வயதில் தோன்றி மனதுக்குள் மௌனமாய் மறைத்த காதலை நாற்ப்பது வருடம் கழித்து நரை விழுந்த பிறகு நாகரீகமாய் கூறுவது போன்று அமைந்த கவிதையை யார் எழுதியது என்று தெரியவில்லை , தெரிந்தால் சொல்லலாம்..