Showing posts with label தொடர்பதிவு. Show all posts
Showing posts with label தொடர்பதிவு. Show all posts

மூன்றாம் ஜாமம்.


நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்த என்னை தொடர்பதிவு என்று உள்ளே இழுத்துவிட்ட திரு வைகை அவர்களுக்கு கொலைவெறியுடன் ஒரு வணக்கத்தை (வணக்கமா நன்றியா) தெரிவித்துவிட்டு வாங்க போலாம்.. 

யோவ்.. யோவ்.. எங்கையா போறீங்க நான் சொனது பதிவ படிக்க போலாமின்னு.. 




1. விரும்பும் 3 விஷயங்கள்


அ. தூறலுடன் கூடிய மாலை நேர கடற்கரை 
ஆ. ஜன்னலோர கடைசி இருக்கை பயணம்  
இ.  அடைமழை தேநீர் 




2. விரும்பாத 3 விஷயங்கள்

அ.  என்னிடம் கேள்விகள் கேட்ப்பது (ஆனா நான் கேட்ப்பேன்)
ஆ. தூக்கம் கலைப்பது 
இ.  அதிக சத்தம் 


3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. என்றாவது ஒரு நாள் ஜோதி கதையை "ஜோதி" படிப்பாள் என்று நினைக்கும் போது 
ஆ. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பைக் ஓட்டும் போது மட்டும் 
இ.  தற்போதைய இயந்திர வாழ்க்கை. 


4. புரியாத 3 விஷயங்கள்

அ.  என்னவள் கண்கள் பேசும் மௌன மொழி 
ஆ. பள்ளிக்காலம் முதல் கல்லூரிக்காலம் வரை கணக்குப்பாடம்   
இ.  என்னையும் ஒரு பதிவர் என்று நம்புவது  


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

அ.  ஒடஞ்ச  கீபோர்ட்
ஆ. ஓடைய போற மௌஸ் 
இ.  அவள் நினைவுகளை நித்தம் பதிவு செய்யும் டைரி. 


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. மலையாள நடிகர் Suraj Venjaramoodu ன் நகைச்சுவைகள் 
ஆ. கும்மி குரூப் மக்களின் கமெண்ட்கள் மற்றும் பதிவுகள் 
இ. கல்லூரிகால ஆட்டோகிராப் புக்.

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ. இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன் 
ஆ.
இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன்  
இ. இதை டைப் 
செய்து கொண்டிருக்கிறேன்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. பொறுமை 
ஆ. சமையல் (வருங்காலத்தில உதவுமில்லையா)
இ. செய்யிற வேலைய ஒழுங்கா செய்ய 


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

அ. மீன் குழம்பு (அம்மா சமைத்தது மட்டும்)
ஆ. காரக்கொழம்பு
இ. கேரளா உணவுவகைகள் எல்லாமே. 


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. மரணம் மற்றும் துயர செய்திகள் 
ஆ. அட்வைஸ் 
இ. அள்ளக்கைகளின் அலப்பறைகள் 


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. காதலின் தீபம் ஓன்று (தம்பிக்கு எந்த ஊரு)
ஆ. வெண்மதியே வெண்மதியே (மின்னலே).
இ. பூவே பூவே பாலப்பூவே (தேவதூதன் -  மலையாளம்)


14. பிடித்த 3 படங்கள்

அ. மின்னலே 
ஆ. பிரம்மாரம் (மலையாளம்)
இ. கம்யம் (தெலுகு)


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. உண்ண உணவு 
ஆ. உடுத்த உடை 
இ.  இருக்க இடம் 
       (பள்ளிக்காலத்தில படிச்சதெல்லாம் மறக்கமாட்டமில்ல)


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்


17. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்



18. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்



19. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்

அ. பனங்காட்டு நரி  (இலக்கியம் மட்டும் வேனாஞ்சாமி )
ஆ. மாலுமி (தண்ணியிலிருந்து கொஞ்சம் வெளிய வாங்கையா)

இ. சுற்றுலா விரும்பி - அருண் 



இங்கே கூப்பிட்டிருக்கிற அத்தன பேர் பிளாகும் தூசு படிஞ்சு போய் கிடக்கு.. இதில ஒரு சிலருக்கு ப்ளாக் ன்னு ஒண்ணு இருக்கிறதே மறந்து போயிருக்கும்.. அதனால அண்ணன் சொன்னத மறுக்காம ஒழுங்கு மரியாதையா இந்த தொடர் பதிவ எழுதுங்க.. இல்லன்னா பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. இவ்வளவு சொல்லியும் எழுதாம போனா நான் மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சிருவேன் சொல்லிட்டேன்.. 

தமிழ்மணமும் தொடர்பதிவுகளும்..



தமிழ் மனம் விருதுகள் அனைவரும் அறிந்ததே. அந்த போட்டியில் கலந்து கொள்ளாத பதிவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எனது பதிவுகள் எனைத்தும் மொக்கையாக இருந்தாலும் அதிலிருந்து சில சுமாரான பதிவுகளை தேர்ந்தெடுத்து ஒரு ஆர்வக்கோளாறில் மூன்று பதிவுகளை நானும் போட்டிக்கான பகுதியில் இணைத்திருந்தேன். இது நடந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. ஏறக்குறைய இந்த விஷயத்தை மறந்து விட்டேன் எனலாம். சொல்லப் போனால் எந்த பகுதியில் எந்த இடுகையை இணைத்தேன் என்பதையே மறந்து விட்டேன்.

இன்று எதேச்சையாக தமிழ்மணத்தில் ஏதாவது விசேஷம் இருக்கிறதா என்று நோட்டம் விடுகையில் கண்ணில் பட்டது தமிழ்மணம் விருதுகள் 2010 முதல் சுற்று முடிவுகள் . அப்போது தான் நானும் இந்த போட்டியில் பங்கேற்றதும் எனது சில இடுகைகளை இணைத்ததும் நினைவுக்கு வந்தது. நமது இடுகை எப்படியும் இங்கு இருக்கப்போவதில்லை என்ற நம்பிக்கையில் யார் யாரது இடுகைகள் எல்லாம் முதல் சுற்றில் தேர்வாகியிருக்கிறது என்று ஒவ்வொரு பகுதியாக பார்த்துக்கொண்டிருக்கையில் அங்கே ஒரு பிரிவில் பார்த்த ஒரு பதிவை என்னால் நம்பவே முடியவில்லை. என்னுடைய ஒரு பதிவும் இரண்டாவது சுற்றிற்கு தேர்வாகியிருக்கிறது.


வாக்களித்து முதல் சுற்றில் வெற்றி பெற செய்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி, மற்றும் மக்களே யார் யார் இன்னும் இந்த இடுகைக்கு வாக்களிக்கவில்லையோ அவர்கள் கோழி பிரியாணிக்கும், 2000 / - ரூபாய் பணத்திற்கும் (ஒரு ஓட்டுக்கு இப்போ 2000/- ரூபாய் தானே தறாங்க) ஆசைப்படாமல் சென்று வாக்களியுங்கள்.

..நன்றி..

*****************************************************************************

சீரான எழுத்துக்களால் கவிதைகள், கதைகள் என எழுதி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அலைவரிசை நண்பர் அஹமத் இர்ஷாத் அவர்கள் கடந்த ஜூலை மாதம் என்னை தொடர் பதிவெழுத அழைத்திருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை இன்று வரை அந்த பதிவை என்னால் எழுத முடியவில்லை. ரொம்ப கஷ்டமான விசயமாக இருக்குமோ என்று நீங்கள் யோசிக்கலாம், உண்மை தான்.. நீங்களே ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து எழுதுங்கள் என்று முழு சுதந்திரமும் தந்திருந்தார்.

ஒரு தலைப்பை தந்து இந்த தலைப்பில் தான் எழுத வேண்டும் என்றாலே நமக்கு கண் விழி பிதுங்கி போய் விடும். நானும் நண்பர் அன்பாக அழைத்தாரே எப்படியாவது ஏதாவது ஒரு தலைப்பை வைத்து எழுதி விட வேண்டுமென்று எழுத முடிவு செய்து மாதங்கள் ஐந்து ஆகி விட்டது. ஆனால் இன்னும் என்னால் எந்த தலைப்பையும் தேர்வு செய்து எழுத முடியவில்லை. எப்படியோ அதையும் காரணமா வச்சு ஒரு பதிவு ரெடி பண்ணியாச்சு..


*****************************************************************************

நீ நான் அவன் என்ற தளத்தில் எழுதும் நண்பர் வெற்றி அவர்கள் என்னை கமலின் சிறந்த பத்து படங்கள் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். அவருக்காக எனக்கு பிடித்த சில படங்களை இங்கே பகிர்கிறேன்.

  • அன்பே சிவம்
  • வேட்டையாடு விளையாடு
  • வசூல் ராஜா M B B S
  • பம்மல் K சமந்தம்
  • பஞ்ச தந்திரம்
  • அவ்வை சண்முகி
  • அபூர்வ சகோதரர்கள்
  • சத்யா
  • தெனாலி
  • மைக்கேல் மதன காமராஜன்.
*****************************************************************************

அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு.. ஒரு வழியா நான் ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலிருந்து போன வாரம் வரைக்கும் என்னையும் மதிச்சு கூப்பிட்ட அத்தனை தொடர்பதிவுகள் எல்லாம் எழுதி முடிச்சாச்சு.. இது தான் என்னோட கடைசி பதிவும், யாருல அங்கே விசிலடிச்சு கை தட்டி சிரிக்கிறது... படுவா கொன்னேபுடுவேன்.. ஓவரா சந்தோஷ படாதீங்கல.. நான் சொன்னது இந்த வருசத்துக்கு.. ஓகே மக்கள்ஸ் எல்லாருக்கும் என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்களை இப்பவே சொல்லிக்கிறேன்.. சந்தோசமா அடுத்தவங்களுக்கு சங்கடமில்லாம கொண்டாடுங்க..

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

2010 எனக்கு பிடித்த பாடல்கள்


கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா

படம் - அங்காடித் தெரு
இசை - GV பிரகாஷ்/ விஜய் அந்தோணி
பாடியவர் - பிரசன்னா
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை



பாடல் - உசுரே போகுதே
படம் - ராவணன்
இசை - கார்த்திக் & முகமது இர்ஃபான்


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயில



பாடல் - பூக்கள் பூக்கும் தருணம்
படம் - மதராசப்பட்டிணம்
இசை - GV பிரகாஷ்
பாடியவர்கள் - GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா
பாடலாசிரியர் - நா. முத்துகுமார்.

பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே



பாடல் - இதுவரை இல்லாத உணர்விது..
படம் - கோவா
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் - அஜீஷ், அண்ரியா

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே



பாடல் - யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
படம் - ஆடுகளம்.
இசை - GV பிரகாஷ் குமார்
பாடியவர் - GV பிரகாஷ் குமார்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சே
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்திப்போல் நீக்கொத்துரதால
அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா
உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா
தலைகாலுப் புரியாம தலைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே நானே



பாடல் - அன்புள்ள சந்தியா...
படம்: காதல் சொல்ல வந்தேன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: கார்த்திக்

அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காற்றில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்



பாடல் - அடடா மழைடா அட மழைடா
படம்: பையா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ராஹுல் நம்பியார், சைந்தவி


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு, ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு



பாடல் - இறகை போலே அலைகிறேனே
படம் - நான் மகான் அல்ல
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் - யுகபாரதி
பாடியவர் - யுவன் ஷங்கர் ராஜா & தன்வி ஷா

இறகை போலே,
அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே,
தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு கற்று பட்டதும்,
அநியாய காதல் வந்ததே,
அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ
மின்னல் போலே தொட்டு சென்றதே..



பாடல் -
மஹா ஜீய மஹா ஜீய
படம் - தமிழ்படம்
இசை - கண்ணன்
பாடியவர்கள் - ஹரிஹரன் ஸ்வேதா மோகன்


மஹா ஜீய மஹா ஜீய
நக்க முக்க நக்க
- ஷகலக்க - ரண்டக்க

லாஹி லாஹி
அயக யஹி யஹி
மீ ஹூ மீ ஹூ
டைலமோ டைலமோ
ரஹ்டுள்ள சோனாலி ஓஹ


இந்த பாடல் எனக்கு பிடித்த சில பாடல்களே.. வெளிவந்தும் பலருக்கும் தெரியாத பாடல்கள் மற்றும் இன்னும் வெளிவராத படங்களிலுள்ள பாடல்கள் என் நிறைய எனக்கு பிடித்த பாடல்கள் உள்ளன.

பத்தாண்டுகளில் பிடித்த பத்து பாடல்கள்..

2001 to 2010 கடந்த பத்தாண்டுகளில் வந்த பல திரைப்படங்களில் ஏராளமான பாடல்கள் பிடித்திருந்தாலும் ஒரு சில பாடல்களே எப்போது கேட்டாலும் அலுக்காத படி மனதோடு ஒன்றிப்போனது.. அந்த ஒரு சில பாடல்களிலும் எனக்கு மிகவும் பிடித்த பத்து பாடல்களை எப்பூடி என்ற தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் ஜீவதர்ஷன் அவர்களின் அழைப்பை ஏற்று சில பாடல் வரிகளோடு இங்கே பகிர்கிறேன்.




பாடல் : வெண்மதியே வெண்மதியே நில்லு
படம் : மின்னலே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர் : திப்பு
எழுதியவர் : வாலி

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

************************************************************

பாடல் : தனியே தன்னந்தனியே
படம் : ரிதம்
இசை : AR ரஹ்மான்
பாடியவர் : ஷங்கர் மகாதேவன்
எழுதியவர் : வைரமுத்து

தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே பொறுமை வென்று விடுவேன்
புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே

ஓ தனியே தனியே தனியே

அக்டோபர் மாதத்தில் அந்திமழை

வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன்
அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில்

இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள்



************************************************************

பாடல் : கோலிக்குண்டு கண்ணு
படம் : எம்மகன்
இசை : வித்யாசாகர்
பாடியவர் : கார்த்திக், கல்யாணி மேனன்.

கோலிக்குண்டு கண்ணு
கோவப்பழ உதடு

பாலப்போல பல்லு

படியவெச்ச வகுடு
ஆளத்தின்னும் கன்னம்
அலட்டிக்காத கையி
சொளத்தட்டு காலு
சொக்கவைக்கும் வாயி

தேளுத்தொட்ட உன்ன
தேடிவந்தேன் தாயி


************************************************************

பாடல் : ஏதேதோ எண்ணங்கள் வந்து
படம் : பட்டியல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜ, ஷ்வேதா


ஏதேதோ எண்ணங்கள் வந்து எனக்குள் தூக்கம் போனதே
வழிதேடி
மனசுக்குள் வந்து வருகை பதிவு செய்யுதே
அலைந்தது
அலைந்தது இதயமும் அலைந்தது
அசைந்தது
அடி மனம் அசைந்தது பார்
மிதந்தது
மிதந்தது இரவென மிதந்தது
வளர்ந்தது
இரு இமை வளர்ந்தது பார்
புரிந்தது
புரிந்தது இது என்ன புரிந்தது
தெளிந்தது
உயிர் வரை தெளிந்தது பார்


************************************************************

பாடல் :விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்..
படம் : திருவிளையாடல்.ஆரம்பம்.
இசை : டி.இமான்
பாடியவர் : ஹரிஷ் ராகவேந்திரா

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளிது வைதாய்
சின்ன சின்ன சிரிபினில் சிதரடிதாய்
சிதரிய இதயதை திருடிக் கொண்டாய்
யார் என்று
நான் யார் என்று
அடி மரந்தே போனதே
உன் பெயரை கூட தெரியமல்
மனம் உன்னை சுற்றுதே


************************************************************

பாடல் : டிங் டாங் கோயில் மணி
படம் : ஜி
இசை : வித்யாசாகர்
பாடியவர் : மது பாலகிருஷ்ணன், சாதனா சர்கம்

டிங்க் டொங்க் கோவில் மணி...
கோவில் மணி நான் கேட்டேன்
உன் பெயர் என் பெயரில்
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிர் ஒலி
ஆஹாஆஆஆ...........
நீ தந்தது காதலில் உயிர் வலி

************************************************************

பாடல் : சந்திப்போமா இருவரும் சந்திப்போமா..
படம் : எனக்கு 20 உனக்கு 18
இசை :
AR ரஹ்மான்
பாடியவர் : உன்னி மேனன், சின்மயி

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில்
ஒரு முறை சந்திப்போமா?

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ

என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம்
இல்லை இதயத்திலே


************************************************************

பாடல் : முன்பே வா அன்பே வா
படம் : சில்லென்று ஒரு காதல்
இசை :
AR ரஹ்மான்
பாடியவர் : நரேஷ் அய்யர் , ஸ்ரேயா கோஷல்

முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா முன்பே வா
என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே
முன்பே வா என் அன்பே வா
ஊட வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூ பூவாய் பூப்போம் வா


************************************************************

பாடல் : நீ தூங்கும் நேரத்தில்
படம் :
மனசெல்லாம்

இசை :
இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஓ..கண்மணியே..
கண்ணுக்கு கண்ணாக என்றென்றும்
நீ வேண்டும் என் உயிரே ஓ.. என் உயிரே..


************************************************************

பாடல் :சாமி கிட்ட சொல்லிபுட்டேன்
படம் :
தாஸ்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயா க்ஹோசல்

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ….



************************************************************


போனஸ் பாடல்..

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. இனி வரும் காலம் என்ற படத்திலுள்ள பாடல் இது. இந்த படம் வெளி வந்ததா என்று கூட தெரியவில்லை. பரணியின் இசையில் ஹாரிஸ் ராகவேந்திரா தனது மயக்கும் குரலில் ஒரு பெண்ணை வருணித்திருப்பார். இந்த பாடலின் காணொளி கிடைக்கவில்லை.





ரஜினியின் ரசிகனாக..

ரஜினியை எப்படி பிடிக்கும், எப்போதிலிருந்து பிடிக்கும் எனக்கேட்டால் அதற்கு என்னிடம் பதிலிருக்காது.. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ரஜினியை பிடிக்கும்.. நான் பார்த்த முதல் ரஜினி படம் "நினைத்தாலே இனிக்கும்".. என்னை பொறுத்த வரை நான் பார்த்த முதல் படமும் இதுவாகத் தான் இருக்க வேண்டும்.. இந்த படத்தில் ரஜினியும் கமலும் நடித்திருந்தாலும் என்னை கவர்ந்தது ரஜினியின் ஸ்டைலும், குறும்புகளும் தான்.. குறிப்பாக சிகரெட்டை தூக்கிப்போட்டு பிடிக்கும் காட்சிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தவை.
ரஜினி படங்களிலேயே என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படம் என்றால் அது பாட்ஷா படமாகத் தான் இருக்கும். காரணம் வேறொன்றுமில்லை ஆறாவது படிக்கும் போது முதல் முதலாக ஸ்கூலுக்கு மட்டம் போட்டு பார்த்த படம், அதற்காக வீட்டில் வீட்டில் வாங்கிய பிரம்படிகளின் அடையாளம் இன்னும் மறைய வில்லை.
1990 களில் எங்கள் ஊரில் ரஜினிக்கு அடுத்த படியாக விஜயகாந்த்துக்கு தான் ரசிகர்கள் அதிகம். (இப்போதைய நிலவரம் எனக்கு தெரியவில்லை). அதிலும் கோவில் திருவிழாக்களில் நாடகங்களல்லாமல் திரைப்படங்கள் போடுவதென்று முடிவு செய்தால் ரஜினி படமா இல்லை விஜயகாந்த் படமா என்று பெரிய பஞ்சாயத்தே நடக்கும். இந்த ரசிகர்கள் ஒரு புறமிருக்க பள்ளிகளில் நாங்கள் தனியாக ரசிகர் மன்றங்கள் வைத்திருப்போம். ரஜினி ரசிகர்களாகிய எங்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களாகிய எங்கள் எதிரிகளுக்கும் அடிக்கடி மோதல்கள் வெடிப்பதுண்டு.. சில சமயங்களில் அது கைகலப்பாகவும் மாறிவிடும். இவையெல்லாம் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை தான். இப்பொழுது அந்த நண்பர்களை பார்த்தால் (பழைய எதிரிகள்) பழைய பள்ளி நினைவுகளைச் சொல்லி சிரிப்பதுண்டு.
ரஜினி நடித்த படங்களில் 95 % படங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த சில படங்கள் இங்கே.


முள்ளும் மலரும் :-
எப்போதாவது எனக்கு நல்ல படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் என் கண்கள் தேடி அலைவது முள்ளும் மலரும் படத்தை தான்.. தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்களை தேர்வு செய்தால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் (ஏன் முதலிடமாகவே) இந்த படம் இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை..

ஆறிலிருந்து 60 வரை :-
பல காட்சிகளில் கண்களில் கண்ணீரை எட்டி பார்க்க வைத்த படம். உறவுகளால் ஏமாற்றப்பட்ட ஒரு ஏழை அண்ணனின் கதையை அருமையாக படமாக்கியிருப்பார் எஸ்.பி. முத்துராமன் ... ரஜினியின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஓன்று.
எங்கேயோ கேட்ட குரல் :- இந்த படத்தில் நடித்தது வில்லனாகவும், வெடிக்கும் வசனங்களுடனும், வேகமான கை கால் அசைவுகளையே புது ஸ்டைலாக மாற்றும் ரஜினி தானா என்று பலரையும் கேட்க வைத்த படம். இந்த படத்தில் தலைவர் நடித்தார் என்பதை விடவும் வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்புடன் கூடிய ரஜினியின் மற்றொரு அற்ப்புத படைப்பு.
நினைத்தாலே இனிக்கும் :- நான் பார்த்த முதல் ரஜினி படம்.. என்னை ரஜினியின் ரசிகனாக மாற்றியதும் இந்த படம்.. படத்தில் தலைவரின் குறும்புகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.. இந்த படத்தில் ரஜினி வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் காமெடிக்கு பஞ்சமிருக்காது. சிகரெட் பிடிக்கும் பந்தைய காட்சியை பற்றி நான் சொல்லி தான் தெரிய வேண்டுமென்றில்லை.(சுஜாதா சாரின் கதை)
தில்லு முல்லு :- ஆக்சன் செண்டிமெண்ட், தமிழ் சினிமாவின் மசாலாக் கலவைகள் என எதுவுமில்லாமல் எடுக்கப்பட்ட முழு நீள நகைச்சுவை திரைப்படம்.. மீசையுடனும், மீசை இல்லாமலும் தேங்காய் சீனிவாசனுடன் தலைவர் செய்யும் லூட்டிகள் ஒவ்வொன்றும் செம கலக்கல். இந்த படத்தை பார்த்து சிரிக்காதவர்கள் நரசிம்மராவுக்கு சொந்தக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும்.
தம்பிக்கு எந்த ஊரு :- கிராமத்தை பற்றி எதுவும் தெரியாமல் நகரத்திலிருந்து கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞனின் கதை. பாம்பை கண்டு பயப்படும் காட்சி, வயலில் கதிரறுக்கும் காட்சி, பால் கறக்கும் காட்சி, துணி துவைக்கும் காட்சி, ஆற்றில் மாடு கழுவும் காட்சி என ஒவ்வொன்றும் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பவை. தம்பிக்கு எந்த ஊரு படத்தின் மற்றொரு சிறப்பு "காதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே" பாடல்..

தளபதி :-
ரஜினியும் மம்மூட்டியும் இணைந்து மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடித்த படம்.. நட்புக்கு இலக்கணம் சொல்லும் ஒரு படைப்பு. இந்த படத்தை நான் எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை. தளபதி படத்தை பற்றி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
வீரா :- இரண்டு பொண்டாட்டிக்காரனின் கதை. அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு அறிமுகப் பாடல் இல்லாமல் வந்த படம். பாடகர், பிளேபாய், மற்றும் இரு பெண்களின் கணவன் என்ற எல்லா கதாப்பாத்திரங்களையும் நகைச்சுவையால் நிறைவு செய்திருப்பார்.. படத்தில் ரஜினி செய்யும் காமெடி போதாதென்று இவருடன் ஒரு காமெடி பட்டாளம் வேறு.. கேட்க்கவா வேண்டும் காமெடிக்கு..
குரு சிஷ்யன் :- ரஜினியுடன் பிரபுவும் இணைந்து கலக்கிய படம்.. பிரபுவும் ரஜினியும் சேர்ந்து வீட்டில் ரைடுக்கு செல்லும் காட்சி, மனோரமா வினு சக்கிரவர்த்தியை மிரட்டும் காட்சி, கௌதமியுடனான காதல் காட்சிகள் மற்றும் ராதாரவியிடம் ரவுடியாக வேலைக்கு சேரும் காட்சி என காமெடிக்கு பஞ்சமில்லாத ஒரு படம்.
ஊர்க்காவலன் :- சத்யா மூவீசின், மனோ பாலா இயக்கிய படம். ராதிகாவின் காமெடி, சங்கர் கணேஷின் பாடல்கள், ஆர்.எம்.வீரப்பனின் திரைக்கதை என அனைத்தும் அருமையான கலவையாக வந்த படம். ( ரஜினி ஹேர் ஸ்டைல் மாத்தினது இந்த படம்தானாம்)
பாட்ஷா :- தலைவரின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் முதலிடம் வகிக்கும் படம் இது. ஆக்சன், காமெடி, பஞ்ச் டயலாக், செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த ஒரு பக்கா கமெர்சியல் படம்.. என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத படமும் கூட..
என்ன தான் தலைவரின் படங்கள் ஆக்சன், அதிரடி வசனங்கள் என நிறைந்திருந்தாலும் தலைவரிடம் என்னை கவர்ந்தது நகைச்சுவை தான்.. தமிழ் நடிகர்களிலேயே தனி ஆளாக காமெடியில் கலக்க முடியுமென்றால் அது ரஜினி மட்டும் தான்..
( கமல் ரசிகர்கள் யாரும் கோவிச்சிகாதிங்கப்பா )

மன்னாதி மன்னன் - தொடரும் தொடர்பதிவு..

மன்னாதி மன்னன் தொடர்பதிவிற்கு ஆதரவு தந்த நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

ஒரு மன்னனுடைய வரலாற்றை பற்றி படிக்கும் போது அம்மன்னனுடைய வீரத்தையும், அவனுடைய வாழ்க்கை முறையும் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது, அந்நாட்டின் அந்த காலகட்டத்தின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, கட்டிடக்கலை, உடையமைப்பு, கல்வித்திறமை, ஆயுதங்கள், ஆபரணங்கள், போர் முறைகள் என பலதரப்பட்ட விசயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது..

பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ஒரு காலத்தில் மாணவ மாணவியர் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களை விரும்பி கற்றுக்கொண்டனர் .. ஆனால் இன்று வரலாறு என்ற சொல் மட்டும் தான் வழக்கிலிருப்பதாக கருதுகிறேன்..(தமிழின் நிலை பற்றி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை).. என் பள்ளிப்பருவத்தில் வரலாறு பிரிவில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவே... அந்த மாணவர்களில் பலரும் குறைவான மதிப்பெண் பெற்றதாலும், வேறு பிரிவுகளில் சேர அனுமதி கிடைக்காததாலும் வரலாற்று பிரிவில் சேர்ந்தவர்கள்.. இது எட்டு வருடங்களுக்கு முன்புள்ள நிலையென்றால், இன்றைய நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்..

கல்லூரிகளில் வரலாறுகள் படும் பாடு பற்றி எனக்கு தெரியவில்லை.. ஆனால் என் நண்பர்களோ, எனக்கு தெரிந்தவர்களோ வரலாறு பாடம் எடுத்து படித்த ஞாபகமும் இல்லை... இப்போது படிப்பதாகவும் தெரியவில்லை.. இதற்கு நேர்மாறாக தொலை தூரக் கல்வியில் வரலாறு படிக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.. இவர்கள் படிப்பது வரலாறுகள் தெரிய வேண்டுமென்பதற்காக அல்ல...எப்படியாவது ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்று தான்...

நம்மை இணைக்கும் இந்த வலையுலகில் உள்ள நண்பர்கள், சகோதரிகள், சகோதரர்கள் என பெரும்பாலானோர் அறிவியல், பொறியியல், கணிதம் மற்றும் கணினி போன்ற பலதரப்பட்ட துறைகளிருந்து தான் இருக்கிறார்களே தவிர வரலாறு படித்தவர்களோ, வரலாற்று துறை சம்மந்தப்பட்டவர்களோ மிகவும் குறைவு..(எனக்கு தெரிந்து என்னை தெரிந்தவர்கள் யாருமில்லை).. இன்றே இப்படியென்றால் நாளைய நிலை..???

சகலமும் கணினிமயமாக்கப்பட்ட இந்த உலகில் நமக்கு அடுத்த தலைமுறைகள் யாரும் வரலாறுகளையோ, வரலாற்று சம்மந்தப்பட்ட படிப்புகளை பள்ளி, கல்லூரிகளில் படிக்கப் போவதில்லை. ஒரு வேளை வரலாறுகள் அறிய ஆசைப்பட்டால் புத்தகங்களை கூட தேடிப்போக மாட்டார்கள்.. மாறாக இமைகள் தேடுவது இணையத்தை தான். ஆகையால் நமக்கு தெரிந்த, வாழ்ந்த, வீழ்ந்த வாழ்த்திய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவுலகம் எனும் வான்வெளியில் மின்னும் நட்ச்சத்திரங்களாகிய உங்கள் பதிவெனும் கல்வெட்டுகளில் பதித்து வையுங்கள்..

"மன்னாதி மன்னன் தொடர் பதிவை தொடர்ந்து எழுத அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்" இப்படி வெறுமனமே சொல்லிட்டு போனால் யாராவது எழுத முன்வருவார்களா..?? நிச்சயமாக வரமாட்டார்கள்.. அதனால் எனக்கு தெரிந்த நல்லுங்களில் சிலரை மட்டும் கை கா(மா)ட்டி விடுகிறேன்.. (இந்த லிஸ்ட்ல நான் இருக்கா கூடாதேன்னு நீங்க சாமி கும்பிடுறது எனக்கு தெரியுது... கவலைபடாம தைரியமா போங்க... உங்க பெயரும் இருக்கும்) உங்களுக்கு இயன்ற பொழுதில் எழுதுங்கள்.. ஆனால் எழுதாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்..

நண்பர்கள், சகோதரர்கள், சகோதரிகள் என இந்த மன்னாதி மன்னன் தொடர்பதிவை தொடர அழைக்கும் நல்ல உள்ளங்கள்..


ஜெய்லானி

Warrior - தேவா


ரசிகன் - மகேஷ்

விந்தை மனிதன்

மனசு - சே.குமார்

இம்சை அரசன் பாபு

யாவரும் நலம் - சுசி

மல்லிகை - ஸ்ரீ அகிலா

நான் நானாக - அன்பரசன்

நிலவின் மடியில் - வினோ

கனவு பட்டறை - சீமான் கனி

மனதோடு மட்டும் - கௌசல்யா

கொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா

புது(க்க)விதை - அண்ணாமலை..!!

இந்திராவின் கிறுக்கல்கள் - இந்திரா

என் மனச் சிதறல்கள் - பாலாஜி சரவணா




இதுக்கு மேல நான் யார் பெயரையாவது சொன்னா..... எனக்கு தெரியும் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு... அதனால இதோட முடிச்சிக்குறேன்.... (மேற்கூறிய எவர் மீதும் எனக்கு முன்விரோதமில்ல..) என்னடா இப்படி மாட்டி விட்டுட்டானேன்னு உங்களுக்கு என் மீது கோவம் இருந்தால் (இருக்கும்) நான் அழைக்காத மற்றும் உங்கள் நண்பர்களை பாரபட்சம் பார்க்காமல் கை கா(மா)ட்டி விடுங்கள்... என் மீதுள்ள கோவம் தானாக குறையும்..

பின்குறிப்பு:- மன்னாதி மன்னன் தொடர் பதிவை தொடருபவர்கள்.. தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள்...


அன்பானவர்களே..சற்று தாமதமானாலும் எழுதுங்கள்.... எழுதாமல் புறக்கணிக்க வேண்டாம்...

மன்னாதி மன்னன் 4 - பாபர் - தொடர்பதிவு..

மன்னாதி மன்னன் பாபரின் வரலாறு பற்றிய முந்தைய பதிவுகள்..

எங்கள் வீட்டில் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம்... நாங்கள் அண்ணன் தம்பிகள் பார்த்துக் கொள்கிறோம்... இங்கே அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன வேலை.... எனபது போல..அந்நியர்கள் எங்கள் நாட்டை கூறு போடுவதா என்று வீறுகொண்டெழுந்தான் சித்தூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங்.. இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள தேசப் பற்று கொண்ட மன்னர்களுக்கு கடிதம் எழுதி 80,000 குதிரை வீரர்கள், 500 யானைகள் கொண்ட ஒரு பெரும்படையை சேர்த்த் கிளம்பினார் பாபரை வெல்ல...

கி.பி 1527 மார்ச் 16 ம் தேதி ஆக்ராவின் மேற்கே 20 மைல் தொலைவில் மற்றொரு மாபெரும் யுத்தம் துவங்கியது. பாபரின் தைரியம், அசாத்திய சாமர்த்தியம் மற்றும் அனுபவம் மிக்க போர் வீரர்களாலும் யுத்தம் துவங்கி 10 மணிநேரத்தில் பாபரின் கைகளை தழுவியது வெற்றிக்கனி.

கந்தேரிக் கோட்டை, வங்காளம் என ஏறக்குறைய மொத்த வட இந்தியாவையும் கைப்பற்றி மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார் பாபர். இக்காலகட்டத்தில் வங்காளத்தில் வாலாட்டிய ஆங்கிலேயர்களை அடக்கினார்.

தான் வாழ்நாளில் அதிகமான நாட்களை போர்க்களங்களில் தொலைத்த பாபர் போர்களில் அதிக நாட்டம் கொண்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் ஒரு சிறந்த மன்னனாகவே திகழ்ந்தார். இவரது ஆட்சிகாலத்தில இந்து முஸ்லிம் நட்புக்கு வித்திடப்பட்டது.

ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை நாடக்குறிப்பில் நுணுக்கமாக விவரித்து எழுதுவது பாபரின் பழக்கம். இந்திய நாட்டின் பருவநிலை மாற்றங்கள், கலாச்சாரம், புவியல், தாவரங்கள், பூக்கள், ஜாதி, மாதம், மக்களின் கணிதத் திறமை மற்றும் கலைத் திறன் என எதையும் தன் நாட்குறிப்பில் குறிப்பிட மறக்கவில்லை. டெல்லியிலும் ஆக்ராவிலும் ஏராளமான பூங்காக்களை உருவாக்கினார்.மேலும் தாவரங்கள், பறவைகள் என பல நுணுக்கமான விவரங்களை பாபரின் சுயசரிதையில் காணலாம்..ஆனால் பாபர் காலத்தில் கட்டிடக்கலை எதுவும் சொல்லும் படியாக முன்னேறவில்லை..

நான்காண்டுகள் மட்டுமே டெல்லி அரியணையில் ஆட்சி செய்த பாபர் டிசம்பர் 26 கி.பி 1530 ம் ஆண்டு அதிகாலை மரணமடைந்தார்.. அப்போது அவருக்கு வயது 48 தான்..

பாபரின் உடல் பிற்காலத்தில் தாஜ்மஹால் கட்டப்பட்ட இடத்தருகே யமுனை நதிக்கக்ரையில் புதைக்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகள் கடந்த பின்னர் பாபரின் உயிலின் படி காபூலுக்கு கொண்டு செல்லப்பட்டு, முன்பு அவர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அழகான பெருந்தோட்டத்தில் மறுபடியும் புதைக்கப்பட்டது..

பாபர் என்ற மாவீரனின் சகாப்த்தம் முடிந்து விட்டாலும் அவருக்கு பின்னர் வந்த ஹீமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் மற்றும் ஒளரங்கஷீப் ஆகியோர் மொகலாய சாம்ராஜ்யத்தை மேலும் பரவ விட்டதோடு மட்டுமல்லாமல் கட்டிடக்கலைகளிலும் இந்திய பெயர் பெற காரணமாக இருந்தார்கள் என்பதில் ஐயமில்லை..

******************

ஒருவன் ஒரு பதிவு எழுதினாலே அதனை தங்கள் பணிச்சுமைகளின் காரணமாக படிப்பது கடினமான காரியம்... ஆனால் ஒரே பதிவாக எழுத வேண்டிய ஒரு மன்னனின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து நான்கு பகுதிகளாக எழுதிய போதும்.. கோவப்படாமல், திட்டாமல், அன்போடு வந்து படித்து தங்கள் கருத்துக்களை கூறிச்சென்ற அனைத்து சக பதிவர்கள், நண்பர்கள் தோழிகள் என அனைவருக்கும் எனது நன்றிகள்..

மன்னாதி மன்னன் தொடரை எழுத மிகவும் உதவியாக இருந்த மதனின் வந்தார்கள் வென்றார்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி..

ஹெலோ... ஹெலோ...

இருங்க சார்.. எங்கே கிளம்புறீங்க.. நன்றி சொன்னா எல்லாமே முடிஞ்சிடுமா.. இனி மேல் தான் ஆட்டமே ஆரம்பம்.. அதை மீண்டுமொரு பதிவில் தெரிவிக்கிறேன்..

..காத்திருங்கள் ஆவலுடன்..

மன்னாதி மன்னன் 3 - பாபர் - தொடர்பதிவு..

22 வயது பாபருக்கு 17 வயதில் மகனா..? என்று கடந்த மன்னாதி மன்னன் பதிவில் பெயர் தெரியாத அன்பர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.. பதிவின் நீளம் கருதி பாபரின் மண வாழ்க்கை, போர்முறைகள் உட்ப்பட பல விசயங்களை சுருக்க வேண்டியிருந்ததால் சொல்ல முடியாமல் போனது. கடந்த பதிவுகளில் சொல்லாமல் விட்டு போன வரலாற்று தகவல்கள் இவை..


பாபரின் முதல் திருமணம் 16 ம் வயதில் ஆயேஷா பேகம் என்ற பெண்ணுடன் நடந்தது, விதியின் விளையாட்டாலும், பல லட்சியங்கள் மற்றும் கனவுகளாலும் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போனது. பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் படுக்கையறையில் நுழைந்தேன், அதுவும் தான் தாயார் கண்டித்துக் கொண்டதால் தான் என்று பாபரே தான் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். (இது போன்ற காரணங்களால் சில ஆண்டுகளில் முதல் மனைவி பாபரை பிரிந்து சென்று விட்டதாக வரலாற்று செய்திகள் குறிப்பிடுகின்றன.)


கி.பி 1504 ம் ஆண்டு காபூல் அரியணையில் ஏறிய பாபர் காபூல் மற்றும் இந்தியாவில் எழு பெண்களை மணந்தார், இவர்களால் மொத்தம் 17 குழந்தைகள் பிறந்தன, அதில் ஏட்டு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. கி.பி 1508 ல் பாபரின் மனைவிகளில் ஒருவரான மாஹின் பேகம் என்ற பெண்மணிக்கு பிறந்தவர் தான் பானிபட் யுத்தத்தில் முக்கிய தளபதியாக இருந்து வெற்றிக்கு வழிவகுத்த ஹீமாயூன்.


கி.பி 1519 இந்தியாவில் நுழைந்த பாபரை, உதவிக்கு அழைத்த தௌலத்ஹான் எதிர்த்து நின்றதால் காபூலுக்கு திரும்பும் நிலை ஏற்ப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஒரு பெரும் படையை திரட்டிக் கொண்டு டிசம்பர் 15 கி.பி 1525 பாபர் சிந்து சமவெளியை கடந்தா பாபர் முதல் வேலையாக எதிர்த்த தௌலத்ஹானை வென்று நண்பனாக்கிக் கொண்டார். தொடர்ந்து டெல்லியை ஆண்ட இப்ராஹாம் லோடியுடன் வரலாற்று பிரசித்தி பெற்ற பானிபட் யுத்தத்திற்கு போர் முரசு கொட்டியது ஏப்ரல் 21 - கி.பி 1526 . இந்த போரில் பல்லாயிரகணக்கான வீரர்களை கொன்று போரில் வென்று இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட கதை தான் உங்களுக்கு தெரியுமே... தெரியாதவர்கள் இதற்கு முன்பு எழுதிய மன்னாதி மன்னன் - பாபர் - தொடர்பதிவு.. மற்றும் மன்னாதி மன்னன் 2 - பாபர் - தொடர்பதிவு.. இந்த இரண்டு பதிவுகளை இயன்றால் படியுங்கள்...


டிஸ்கி:- என்றோ வாழ்ந்து செத்து போன மன்னனோட கதைய இப்படி போட்டு இழுத்தடிக்கிறான் என்று என் மீது கோபப்படும் அன்பு நெஞ்சங்களுக்கு... தொடரும் அப்படின்னு போட்டு சுவாரசியமா கொண்டு போறதுக்கு இது சிறு தொடர்கதையோ, சின்ன திரை சீரியலோ இல்லை.. வரலாறு..(வரலாறு முக்கியம் மக்களே) இதை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றவும் முடியாது, விசயங்களை மறைக்கவும் முடியாது.. ஆகையால் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மகிழ்ச்சியுடன் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்...

...முந்தைய மன்னாதி மனனின் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்..