ஒரு மன்னனுடைய வரலாற்றை பற்றி படிக்கும் போது அம்மன்னனுடைய வீரத்தையும், அவனுடைய வாழ்க்கை முறையும் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாது, அந்நாட்டின் அந்த காலகட்டத்தின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, கட்டிடக்கலை, உடையமைப்பு, கல்வித்திறமை, ஆயுதங்கள், ஆபரணங்கள், போர் முறைகள் என பலதரப்பட்ட விசயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது..
பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ஒரு காலத்தில் மாணவ மாணவியர் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களை விரும்பி கற்றுக்கொண்டனர் .. ஆனால் இன்று வரலாறு என்ற சொல் மட்டும் தான் வழக்கிலிருப்பதாக கருதுகிறேன்..(தமிழின் நிலை பற்றி நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டுமென்றில்லை).. என் பள்ளிப்பருவத்தில் வரலாறு பிரிவில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவே... அந்த மாணவர்களில் பலரும் குறைவான மதிப்பெண் பெற்றதாலும், வேறு பிரிவுகளில் சேர அனுமதி கிடைக்காததாலும் வரலாற்று பிரிவில் சேர்ந்தவர்கள்.. இது எட்டு வருடங்களுக்கு முன்புள்ள நிலையென்றால், இன்றைய நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
கல்லூரிகளில் வரலாறுகள் படும் பாடு பற்றி எனக்கு தெரியவில்லை.. ஆனால் என் நண்பர்களோ, எனக்கு தெரிந்தவர்களோ வரலாறு பாடம் எடுத்து படித்த ஞாபகமும் இல்லை... இப்போது படிப்பதாகவும் தெரியவில்லை.. இதற்கு நேர்மாறாக தொலை தூரக் கல்வியில் வரலாறு படிக்கும் பலரை பார்த்திருக்கிறேன்.. இவர்கள் படிப்பது வரலாறுகள் தெரிய வேண்டுமென்பதற்காக அல்ல...எப்படியாவது ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்று தான்...
நம்மை இணைக்கும் இந்த வலையுலகில் உள்ள நண்பர்கள், சகோதரிகள், சகோதரர்கள் என பெரும்பாலானோர் அறிவியல், பொறியியல், கணிதம் மற்றும் கணினி போன்ற பலதரப்பட்ட துறைகளிருந்து தான் இருக்கிறார்களே தவிர வரலாறு படித்தவர்களோ, வரலாற்று துறை சம்மந்தப்பட்டவர்களோ மிகவும் குறைவு..(எனக்கு தெரிந்து என்னை தெரிந்தவர்கள் யாருமில்லை).. இன்றே இப்படியென்றால் நாளைய நிலை..???
சகலமும் கணினிமயமாக்கப்பட்ட இந்த உலகில் நமக்கு அடுத்த தலைமுறைகள் யாரும் வரலாறுகளையோ, வரலாற்று சம்மந்தப்பட்ட படிப்புகளை பள்ளி, கல்லூரிகளில் படிக்கப் போவதில்லை. ஒரு வேளை வரலாறுகள் அறிய ஆசைப்பட்டால் புத்தகங்களை கூட தேடிப்போக மாட்டார்கள்.. மாறாக இமைகள் தேடுவது இணையத்தை தான். ஆகையால் நமக்கு தெரிந்த, வாழ்ந்த, வீழ்ந்த வாழ்த்திய மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவுலகம் எனும் வான்வெளியில் மின்னும் நட்ச்சத்திரங்களாகிய உங்கள் பதிவெனும் கல்வெட்டுகளில் பதித்து வையுங்கள்..
"மன்னாதி மன்னன் தொடர் பதிவை தொடர்ந்து எழுத அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்" இப்படி வெறுமனமே சொல்லிட்டு போனால் யாராவது எழுத முன்வருவார்களா..?? நிச்சயமாக வரமாட்டார்கள்.. அதனால் எனக்கு தெரிந்த நல்லுங்களில் சிலரை மட்டும் கை கா(மா)ட்டி விடுகிறேன்.. (இந்த லிஸ்ட்ல நான் இருக்கா கூடாதேன்னு நீங்க சாமி கும்பிடுறது எனக்கு தெரியுது... கவலைபடாம தைரியமா போங்க... உங்க பெயரும் இருக்கும்) உங்களுக்கு இயன்ற பொழுதில் எழுதுங்கள்.. ஆனால் எழுதாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள்..
ஜெய்லானி
Warrior - தேவா
ரசிகன் - மகேஷ்
விந்தை மனிதன்
மனசு - சே.குமார்
இம்சை அரசன் பாபு
யாவரும் நலம் - சுசி
மல்லிகை - ஸ்ரீ அகிலா
நான் நானாக - அன்பரசன்
நிலவின் மடியில் - வினோ
கனவு பட்டறை - சீமான் கனி
மனதோடு மட்டும் - கௌசல்யா
கொஞ்சம் வெட்டி பேச்சு - சித்ரா
புது(க்க)விதை - அண்ணாமலை..!!
இந்திராவின் கிறுக்கல்கள் - இந்திரா
என் மனச் சிதறல்கள் - பாலாஜி சரவணா
இதுக்கு மேல நான் யார் பெயரையாவது சொன்னா..... எனக்கு தெரியும் நீங்க என்ன பண்ணுவீங்கன்னு... அதனால இதோட முடிச்சிக்குறேன்.... (மேற்கூறிய எவர் மீதும் எனக்கு முன்விரோதமில்ல..) என்னடா இப்படி மாட்டி விட்டுட்டானேன்னு உங்களுக்கு என் மீது கோவம் இருந்தால் (இருக்கும்) நான் அழைக்காத மற்றும் உங்கள் நண்பர்களை பாரபட்சம் பார்க்காமல் கை கா(மா)ட்டி விடுங்கள்... என் மீதுள்ள கோவம் தானாக குறையும்..
பின்குறிப்பு:- மன்னாதி மன்னன் தொடர் பதிவை தொடருபவர்கள்.. தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள்...
எங்கள் வீட்டில் ஆயிரம் சண்டைகள் இருக்கலாம்... நாங்கள் அண்ணன் தம்பிகள் பார்த்துக் கொள்கிறோம்... இங்கே அடுத்த வீட்டுக்காரனுக்கு என்ன வேலை.... எனபது போல..அந்நியர்கள் எங்கள் நாட்டை கூறு போடுவதா என்று வீறுகொண்டெழுந்தான் சித்தூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த மன்னன் ராணாசிங்.. இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள தேசப் பற்று கொண்ட மன்னர்களுக்கு கடிதம் எழுதி 80,000 குதிரை வீரர்கள், 500 யானைகள் கொண்ட ஒரு பெரும்படையை சேர்த்த் கிளம்பினார் பாபரை வெல்ல...







