கற்றை நினைவுக்கு ஒற்றை மீன்..




காலம் தொலைத்த 
வருடத்திலொரு 
நாளொன்றின் இரவில்
யாருமில்லை என்றறிந்து 
என் வீட்டிற்கு 
வலது கால் வைத்து 
உள் நுழைந்தாய்  

பொறுமையாய் வீட்டை சுற்றிக்காட்டிக் 
கொண்டிருந்தேன் 
நான் 
எதிலும் நாட்டம் காட்டவில்லை 
நீ..

கடைசியாய் 
வா உன்னை பிரதிஷ்டை செய்யப்போகும் 
கருவறையை காட்டுகிறேன் என்றழைத்தேன் 
சட்டென்று ஒட்டிக்கொண்டது 
பூரண நிலவாய் புன்னகையும் 
வெளித்தெரியா வெட்கமும் 

மௌனமாய் 
பின் தொடர்ந்து
நடந்தாய் 
சில அடிகள் தாண்டியதும் 
தழுவிக்கொண்டது
நம் கைகள்

அறை 
நெருங்க நெருங்க 
நீ என்னிடம் நெருங்க
நான் நொறுங்க 
நாம்
கட்டிலை நெருங்கினோம்
நானுன்னை பிரதிஷ்டை செய்ய 
ஆடைகள் களைந்தேன் 

முத்த அபிஷேகத்தில் 
துவங்கி 
வியர்வை அபிஷேகத்தில் முடிந்தது

காற்றுபுகா இடைவெளி 
கணநேர மௌனம் 
எக்கச்சக்க முத்தங்கள் 
இதயங்கள்
இடம் பெயர்ந்தன 

சிறிய இடைவேளைக்கு பின்னர் 
என்னை விடுதலை செய்து 
கருவறையை 
கண்களால் அளவெடுத்துக்கொண்டே  
வெட்க்கம் கலந்த முகச்சுளிப்புடன்  
"என்ன மட்டமான டேஸ்ட்டா உனக்கு" 
என்னை திட்டிக்கொண்டே 
நீ
சன்னல் திரைச்சீலை 
புக் செல்ப் 
கம்ப்யூட்டர் டேபிள் 
பெட் கவர் 
........
.........
.......... etc.. etc  
என்று எல்லாவற்றையும் சரி செய்து
உனக்கு பிடித்த வெண்மை நிறத்தையும்  
அறை முழுவதும் விதைத்து சென்றாய்

ஆண்டுகள் கடந்தபின்
கண்ணாடித் தொட்டியில்  
உன் பெயரிட்டு 
ஒற்றை மீனொன்று வளர்க்கிறேன் 

உன்னோடு சேர்ந்து
எல்லாம் மாறின
இன்னும் மாறாத என்னையும் 
உன் வாசம் விட்டுப்போகாத 
என்னறையையும் 
மீண்டும் ஒரு முறை 
வந்து பார்த்துவிட்டு போ!

வரும் போது 
என் பெயர் சுமந்த உன் 
குழந்தையையும் கூட்டி வர மறவாதே....