கவிதைகளல்லாதவை - 1.1

என்னை கவிஞனென
நிரூபிக்க பட்டாம்பூச்சிகளையும்
சில இறகுகளையும்
சேகரித்து வந்தால் போதுமென்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்

நானோ
அது எதுவமறியாமல்
நெருப்புமிழும் பறவைகளை
தேடியலைந்துக் கொண்டிருக்கிறேன். .

                      

கவிதைகளல்லாதவை

கவிதைகளென்று பெயரிடப்பட்ட
வார்த்தைகளின் குவியலொன்று
சிறகுகள் முழைத்து
மலையுச்சியை நோக்கி
பறந்து சென்றதையறிந்து
கவலைப்படும் நீங்கள்

சிறகுகளிலிருந்து உதிர்ந்த
இறகுகள் சேகரித்தபடி
மலையுச்சியை தாண்டி அவள்
சென்று கொண்டிருப்பதை
அறியாமலிருத்தல் நலம்.