MS EXEL பயன்படுத்தும் போது உபயோகமுள்ள Ctrl Key குறுக்குவழிகள். (SHORTCUTS)




CTRL+( Unhides any hidden rows within the selection.

CTRL+) Unhides any hidden columns within the selection.

CTRL+& Applies the outline border to the selected cells.

CTRL+_ Removes the outline border from the selected cells.

CTRL+~ Applies the General number format.

CTRL+$ Applies the Currency format with two decimal places (negative numbers in parentheses).

CTRL+% Applies the Percentage format with no decimal places.

CTRL+^ Applies the Exponential number format with two decimal places.

CTRL+# Applies the Date format with the day, month, and year.

CTRL+@ Applies the Time format with the hour and minute, and AM or PM.

CTRL+! Applies the Number format with two decimal places, thousands separator, and minus sign (-) for negative values.

CTRL+- Displays the Delete dialog box to delete the selected cells.

CTRL+* Selects the current region around the active cell (the data area enclosed by blank rows and blank columns).
CTRL+: Enters the current time.
CTRL+; Enters the current date.
CTRL+` Alternates between displaying cell values and displaying formulas in the worksheet.
CTRL+' Copies a formula from the cell above the active cell into the cell or the Formula Bar.
CTRL+" Copies the value from the cell above the active cell into the cell or the Formula Bar.
CTRL++ Displays the Insert dialog box to insert blank cells.
CTRL+1 Displays the Format Cells dialog box.
CTRL+2 Applies or removes bold formatting.
CTRL+3 Applies or removes italic formatting.
CTRL+4 Applies or removes underlining.
CTRL+5 Applies or removes strikethrough.
CTRL+6 Alternates between hiding objects, displaying objects, and displaying placeholders for objects.
CTRL+7 Displays or hides the Standard toolbar.
CTRL+8 Displays or hides the outline symbols.
CTRL+9 Hides the selected rows.
CTRL+0 Hides the selected columns.
CTRL+A Selects the entire worksheet.
CTRL+B Applies or removes bold formatting.
CTRL+C Copies the selected cells.
CTRL+D Uses the Fill Down command to copy the contents and format of the topmost cell of a selected range into the cells below.
CTRL+F Displays the Find dialog box.

CTRL+G Displays the Go To dialog box.

CTRL+H Displays the Find and Replace dialog box.

CTRL+I Applies or removes italic formatting.

CTRL+K Displays the Insert Hyperlink dialog box for new hyperlinks or the Edit Hyperlink dialog box for selected existing hyperlinks.

CTRL+L Displays the Create List dialog box.

CTRL+N Creates a new, blank file.

CTRL+O Displays the Open dialog box to open or find a file.

CTRL+P Displays the Print dialog box.

CTRL+R Uses the Fill Right command to copy the contents and format of the leftmost cell of a selected range into the cells to the right.

CTRL+S Saves the active file with its current file name, location, and file format.

CTRL+U Applies or removes underlining.

CTRL+V Inserts the contents of the Clipboard at the insertion point and replaces any selection. Available only after you cut or copied an object, text, or cell contents.

CTRL+W Closes the selected workbook window.

CTRL+X Cuts the selected cells.

CTRL+Y Repeats the last command or action, if possible.

CTRL+Z Uses the Undo command to reverse the last command or to delete the last entry you typed.

குறுக்குவழிகள் தொடரும்...

இன்றைய இயக்குனர் 3 - ஞான ராஜசேகரன்.


மகாகவி பாரதியையும், பெரியாரையும் பற்றி கேள்விபட்டிருக்கிறேன், புத்தகங்களில் படித்திருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை. இவர்களை நம் கண் முன்னால் நிறுத்தியவர் எனது இன்றைய இயக்குனர் திரு ஞான ராஜசேகரன் அவர்கள். மகாகவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போகிறோம் என்று பல முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் அறிவிப்புகள் விட்ட போதிலும் அதை சாதித்து காட்டிய பெருமை இயக்குனர் ஞான ராஜசேகரனையே சாரும்.

தனித்துவமான படங்களை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வமுடையவர், இளம்வயதிலேயே சினிமாவில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த இவர் ஒரு குறும்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். ஞான ராஜசேகரன் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே சிறந்த படைப்புகளாகவே அமைந்தன.

மோகமுள்:

1995 ம் ஆண்டு ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். இத்திரைப்படம் எழுதப்பட்ட காலத்தில் சர்ச்சைகளை தோற்றுவித்த தி. ஜானகிராமனின் மோகமுள் என்ற நாவலாகும். இந்த படம் கருநாடக சங்கீதத்தை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட படம்.


மோகமுள் திரைப்படம் இந்திரா காந்தி தேசிய விருதை தமிழுக்கு பெற்றுத்தந்தது.

முகம்:

1999 ல் வெளிவந்த திரைப்படம். தமிழ் சினிமாவில் வில்லனாகவே அறியப்பட்ட ஒரு சிறந்த நடிகர் நாசர் மீது நம்பிக்கை வைத்து, அவை கதாநாயகனாக அறிமுகம் செய்த படம்.

பாரதி:

2000 ல் இளையராஜாவின் இசையில், தங்கர்பச்சான் ஒளிப்பதிவில், ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மகாகவி பாரதியின் வேடத்தில் ஷியாஜி ஷிண்டே என்ற மராட்டிய நாடக நடிகரை நடிக்க வைத்தார்.


பாரதி திரைப்படம் 2001 ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது.


பெரியார்:

2007 ல் வெளியானது, இத்திரைப்படம் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. பெரியாராக சத்தியராஜ் நடித்திருந்தார்.


பெரியார் திரைப்படத்திற்கு தமிழக அரசால் 95 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

ஞான
ராஜசேகரன் எழுதிய வயிறு, மரபு மற்றும் பாடலிபுத்திரம் என்ற நாடகங்கள் 1980 ல் வயிறு என்ற தொகுப்பாக வெளிவந்தது.

என்னை கவர்ந்த இயக்குனர்களோடு மீண்டும் சந்திக்கிறேன்....

அறிந்ததும் அறியாததும் 4 - "ஓசனிச்சிட்டு" (HUMMING BIRD)

"ஓசனிச்சிட்டு" பெயரை கேட்டாலே வித்யாசமா இருக்குதில்ல , ஆமாங்க நாம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு அதிசயமான ஒரு பறவைங்க இந்த ஓசனிச்சிட்டு, அட அதுதாங்க HUMMING BIRD .



உலகத்திலுள்ள பறவை இனத்திலேயே மிக மிகச் சிறிய பறவை இந்த ஓசனிச்சிட்டுகள். இவை சிறகடித்துக்கொண்டே பூவிலிருந்து தேனை உறிஞ்சு வாழும். ஓசனிச்சிட்டு பேரினத்தில் 320 வகைகள் உள்ளன. ஓசனிச்சிட்டுகள் பறவை இனத்திலேயே மிக அதிக வகைகள் கொண்ட ஒரு பேரினமாகும்.



சுண்டு ஓசனிச்சிட்டு என்ற இவ்வினத்தைச் சேர்ந்த பறவை 5 செ.மீ நீளமே கொண்டுள்ளது, எடையும் 1.8 கிராம் மட்டுமே. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிக்கும். இந்த பறவை கியூபா நாட்டில் காணப்படுகிறது.

ஓசனிச்சிட்டுகளுள் மிகப் பெரியது பேரோசனிச்சிட்டு ஆகும். இந்த பேரோசனிச்சிட்டு 18-20 கிராம் எடையும் ஏறத்தாழ 21-22 செ.மீ நீளமும் கொண்டது. இவை நொடிக்கு 8-10 முறைகள்தான் இறக்கைகளை அடிக்கின்றன, இவ்வகை தென் அமெரிக்காவின் ஆண்டீய மலைத்தொடர்ப் பகுதிகளில் ஈக்வெடோர் முதல் தெற்கே சிலி, அர்ஜென்டினா நாடுகள் வரை உள்ள பகுதிகளில் வாழ்கின்றன.
நடு எடை உள்ள ஓசனிச்சிட்டுகள் நொடிக்கு 20-25 முறைகள் சிறகடிக்கின்றன.

இப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து தேன் உண்ணுவது, இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக, நேர் செங்குத்தாக, மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது.




ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான மகரந்த சேர்க்கை நிகழ்கின்றது. ஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன.

பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.



ஹம்மிங் பறவை from Jayanth on Vimeo.

இந்த பகிர்வு உங்களை கவர்ந்திருந்தால் (இல்லையென்றாலும்) நீங்க வந்ததுக்கு அடையாளமா கருத்துக்களை சொல்லிவிட்டு போகலாமே...

மீண்டும் சிந்திப்போம்...




இன்றைய இயக்குனர் 2 - மகேந்திரன் (உதிரிப்பூக்கள்)


என்னை கவர்ந்த இயக்குநர்களை உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்
இந்த பதிவு ..




தமிழ் திரையுலக இயக்குனர்களில் என்றும் நினைவில் நிற்பவர்களில் ஒருவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். இவருடைய படங்கள் ஆழமான கதையும், மென்மையான உணர்வுகளையும் சொல்லக் கூடியதாகவும் இருக்கும்.




இயக்குனர் மகேந்திரன் அவர்களின் முதல் படமான முள்ளும் மலரும் சினிமா என்பது விஷுவல் மீடியா என்பதை தமிழ் சினிமாவுக்கு எடுத்து சொன்னப் படம். முள்ளும் மலரும் படம் 1978 ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்தது.இத்திரைப்படம் உமா சந்திரன் எழுதி கல்கி வார இதழில் வெளிவந்த கதையாகும். இப்படம் ரஜினிகாந்த்துக்கு புகழ் தேடித்தந்த படமாகும். ரஜினிகாந்தின் உன்னத வளர்ச்சிக்கு காரணமானவர்களில் இயக்குனர் மகேந்திரன் முக்கியமானவர் எனலாம்.




இவரது இரண்டாவது படமான உதிரிப்பூக்கள் 1979 ல் அதிரடியான இசை இல்லாமல், ஆர்ப்பாட்ட காட்சிகள் இல்லாமல்,இயல்பான ஒளியில் யதார்த்தமான நடிப்பில் வெளிவந்ததது. இந்த படத்தின் மொத்த வசனத்தையும் இரண்டு பேப்பரில் எழுதிவிடலாம். படம் முழுவதும் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. இப்படம் பல பாராட்டுகளைப் பெற்றது.




மகேந்திரன் அவர்களின் இந்த இரண்டு படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் மிகச் சிறந்த படங்களாக கருதப் படுகிறது. மேலும் ஜானி, மெட்டி, நெஞ்சத்தை கிள்ளாதே என 12 படங்களை இயக்கியுள்ளார், இவை அனைத்துமே பெயர் சொல்லும் படங்களாகவே அமைந்ததன.





இயக்குனர் மகேந்திரன் அவர்கள் தங்கப்பதக்கம், காளி, கள்ளழகர், அழகிய பூவே என 25 படங்களுக்கு மேல் கதை, வசனம், திரைக்கதை எழுதியுள்ளார். இவர் இன முழக்கம், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். மேலும் சினிமாவும் நானும் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

2005 ம் ஆண்டு விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சச்சின் என்ற திரைப்படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன் என்பவர் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்கள் என்றாலும், சிறந்த ஐந்து படங்கள் என்றாலும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் படம் அந்த பட்டியலில் இருக்கும்.



என்னைக் கவர்ந்தவர்கள் இன்னும் வருவார்கள்...

அறிந்ததும் அறியாததும் 3 - தமிழிசை & தமிழிசைக் கருவிகள்

தினமும் புதிதாய் வந்து கொண்டிருக்கும் நவீன இசையை கேட்டு ரசித்து நாம் மறந்து போன தமிழனின் பாரம்பரிய இசை பற்றியும் , தமிழிசைக் கருவிகள் பற்றியும் இந்த பதிவு..



இசைகளிலேயே பழமையான இசை "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய தமிழுடன் பிறந்தது நம் தமிழிசை" .

உயிரும் உடம்பும் போன்றது நம் தமிழர்களுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பு. தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு தாய் கருவுற்றால் நலுங்கு பாட்டு , குழந்தை பிறந்த்ததும் தாலாட்டுப் பாடல், சிறு வயதில் நிலாப்பாடல், இள வயதில் காதல் பாடல், திருமணத்திற்கு திருமணப் பாடல், மரணமடைந்ததால் ஒப்பாரிப் பாடல் என்று தமிழனின் வாழ்வு பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றியிருந்த்திருக்கிறது. (தற்போதைய காலகட்டத்தில் நலுங்குப் பாடல், தாலாட்டு, நிலாப்பாட்டு, திருமணப் பாடல், ஒப்பாரி என்று எதுவும் வழக்கத்தில் இருப்பதாக தெரியவில்லை, பழைய தமிழ் படங்களை தவிர வேறெங்கும் இவற்றை நான் பார்த்ததுமில்லை, இவற்றில் இன்று வழக்கத்தில் இருப்பது காதல் பாடல்கள் மட்டும் தான், திரைப்படங்களில் மட்டும்.)

இலக்கியங்கள் படைத்த தமிழும், இசையும் இன்று இல்லாமல் போகும் நிலையில்....


* தமிழிசைக் கருவி - வீணை


வீணை ஒரு நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.


* தமிழிசைக் கருவி - யாழ்




யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். யாழ் ஒரு மீட்டு வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதன் இசையொலி பெருக்கி தணக்கு எனும் மரத்தால் செய்யப்பட்டது. இது படகு வடிவமாய் இருக்கும். மேலே தோலால் மூடப்பட்டிருக்கும். இந்தத் தோலுக்குப் போர்வைத்தோல் என்று பெயர். போர்வைத்தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி மேலே உள்ள தண்டியுடன் பிணைக்கப்பட்டிருக்கும். சில யாழ்களில் மாடகம் அல்லது முறுக்காணிகள் இருந்தன. அத்தகைய யாழ்களில் நரம்புகள் தண்டியின் துவாரங்களின் வழியாகச் சென்று முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும். சிலவற்றில் நரம்புக்கட்டு அல்லது வார்க்கட்டு தண்டியில் வரிசையாகக் காணப்படும். வார்க்கட்டுகளை மேலும் கீழுமாக நகர்த்தி நரம்புகளைச் சுருதி கூட்டினர்.
பல்லவர் காலக் கோயிலான காஞ்சி கைலாசநாதர் கோயில் (இராஜசிம்மன் மற்றும் சோழர் காலக் கோயில்களான பொன்செய் நல்துணையீஸ்வரம் கோயில் (பராந்தகன்), திருமங்கலம் கோயில் (உத்தம சோழன்) ஆகியவற்றில் யாழ்ச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. வீணையின் வரவே யாழின் செல்வாக்கையழித்தது என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.


* தமிழிசைக் கருவி - பறை



பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். 'பறை' என்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி 'பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம்.

பறை கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் 'பறை' பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. 'பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.


* தமிழிசைக் கருவி - தவில்


தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கருநாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும்.



* தமிழிசைக் கருவி - உறுமி மேளம்




உறுமி மேளம் ஒரு கொட்டும் இசைக்கருவியாகும். தமிழ்நாட்டு நாட்டுப்புற இசையிலும், கோவில்களிலும் , தமிழிசையிலும் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.


* தமிழிசைக் கருவி - மிருதங்கம்



மிருதங்கம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது.
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.
* தமிழிசைக் கருவி - மத்தளம்.



இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ்ப்பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இந்த மத்தளம். பலவையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும்.மத்தளத்தின் ஸ்ருதியை மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்ப்படுகிறது.


* தமிழிசைக் கருவி - முரசு




முரசு என்பது ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

முரசுகளில் வீர முரசு, தியாக முரசு, நியாய மிராசு என மூன்று வகை உண்டு. வீர முரசு போர்க்காலங்களில் பயன்படுத்தப்படும் முரசு, இந்த முரசி வைப்பதற்காகவே உயரமான இடத்தில் தனி மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். தியாக முரசு என்பது வறியவர்களை வரவேற்க அமைக்கப்பட்ட முரசு, நியாய முரசு என்பது நீதி வழங்கும் காலங்களில் நியாயம் கேட்க விரும்புபவர்களை அழைக்க அமைக்கப்பட்ட முரசு இது. (மனுநீதிச் சோழன் அரண்மனை முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி இது போன்றது)

* தமிழிசைக் கருவி - பேரிகை

பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

* தமிழிசைக் கருவி - தமுக்கு
தமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் அரசாங்கம், நீதிமன்றம், கோயில்கள் போன்றவற்றின் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு அடிக்கும் ஒரு இசைக்கருவியாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


உங்களுக்கு அரிய தவல்கள் சொல்லும் அறிந்த்ததும் அறியாத்ததும் தொடரும் ...


இன்றைய இயக்குனர் - அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan)


என்னை கவர்ந்த இயக்குநர்களைப் பற்றி ஒரு பதிவு , உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்..




அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, ஜூலை 3 , 1942)



கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். மலையாளப்படங்களை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் இவர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய திரைப்படங்கள்.
  • நிழல்குத்து (2002)
  • கதாபுருஷன் (1996)
  • விதேயன் (1994)
  • மதிலுகள் (1990)
  • அனந்தரம் (1987)
  • முகாமுகம் (1984)
  • எலிப்பத்தாயம் (1981)
  • கொடியெட்டம் (1977)
  • சுயம்வரம் (1972)


மேலும் பல குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் , சினிமாயுடே லோகம் {சினிமாவின் உலகம்},நிர்மால்யம் மற்றும் எலிப்பத்தாயம் போன்ற நூலகளைய்ம் எழுதியுள்ளார். இவை அனைத்தும் தமிழ் மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டது. இதில் , சினிமாயுடே லோகம் 1983 வருட தேசிய விருது பெற்ற புத்தகம்.

இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

என்னை கவர்ந்தவர்கள் இன்னும் வருவார்கள்....

கணினியை பயன்படுத்தும் போது உபயோகமுள்ள START KEY குறுக்குவழிகள் (Shortcuts) - 2.

Start + M: Minimizes all open windows

Start + Shift + M: Maximizes All Windows

Start + E: Runs Windows Explorer

Start + R: Open the RUN Dialog Box

Start + F: Open the Search Results Dialog box

Start + CTRL + F: Opens the Search Results-Computer dialog Box (if the computer is connected to a network)

Start + Pause (Break): Opens the System Properties Dialog Box


குறுக்குவழிகள் தொடரும்...

இந்தியாவைப் பற்றி - அறிந்ததும் அறியாததும் பாகம் - 2




யேல் பல்கலைகழகத்தில் ( அமெரிக்கா ) டாக்டர் பட்டம் பெற்ற ஒரே தமிழர் அறிஞர் அண்ணாதுரை .

இந்தியாவில் முதல் ரயில் போக்குவரத்து பம்பாய் - குர்லா இடையே உண்டானது.

தமிழ்நாட்டில் தயாராகும் துணிகளில் 27 % கைத்தறி மூலமே உருவானது.

சென்னையில் டெலிவிஷன் நிலையம் 15 - 08 - 1975 ல் தொடங்கப்பட்டது.

மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட விமானப் பயணம் செய்தது கிடையாது.

தமிழகத்தில் அதிசய இடங்களில் ஒன்றாக விளங்கி வருவது V . G . P தங்க கடற்கரையாகும்.

இந்தியாவில் அதிக அளவு அணைகள் உள்ள மாநிலங்கள் - மராட்டியம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா.

உலகிலேயே அதிக அளவு தபால் பட்டுவாடா செய்யும் நாடு இந்தியா .

தமிழ்நாட்டில் முதல் தொலைபேசி இணைப்பு வசதி கல்கத்தாவுக்கும் டைமண்ட் ஹார்பர் துறைமுகத்திற்கும் இடையே போடப்பட்டது.

குதுப்மினார் என்பதே மொகலாயர்களால் கட்டப்பட்ட கோபுரங்களில் மிகவும் உயரமானது.

பழங்கால கண்ணாடி மாளிகை ஓன்று பாண்டிச்சேரியில் உள்ளது.

1197 தீவுகள் இந்தியாவுக்கு சொந்தமாக உள்ளது.

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆனந்தி பாய் ஜோஷி என்பவர்.

தேசிய விருது பெற்ற முதல் தமிழ் கவிஞர் கவியரசு கண்ணதாசன்.

தமிழ்நாடு என்ற பெயரை சென்னைக்கு அளித்தவர் அறிஞர் அண்ணா .

நடிகராக இருந்து முதலமைச்சர் ஆனவர்கள் இந்தியாவை பொறுத்தவரை
- - என் . டி . ராமாராவ்
- - எம் . ஜி . ராமச்சந்திரன்
- - ஜெயலலிதா

ஆதிசங்கரர் பிறந்த ஊர் கேரளாவில் உள்ள காலடி .

..........................

பி . குறிப்பு :- இங்கே குறிப்பிட்டிருக்கும் செய்திகள் பத்து வருடங்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்டது. ஒருவேளை சில மாற்றங்கள் இருக்கலாம்.



................................................... பதிவுப் படம் ............................................





இணையத்தை (INTERNET) வேகமாகவும் எளிதாகவும் பயன்படுத்த உதவும் (SHORTCUTS) குறுக்குவழிகள்.

இது போன்ற குறுக்கு வழிகள் தெரியாமல் இணையத்தை முதலில் பயன்படுத்தும் போது நான் மிகவும் சிரமபட்டிருக்கிறேன். ஆகையால் எனக்கு தெரிந்த சில இன்டர்நெட் shortcuts பற்றி இங்கு தெரிவித்துள்ளேன்.




S hortcuts to Work Fast in Internet Explorer



Alt + A = Open the Favorites drop-down menu


Alt + D = Select the current Address bar text

Alt + F = Open the File drop-down menu

Alt + H = Open the Help drop-down menu

Alt + T = Open the Tool drop-down menu

Alt + V = Open the View drop-down menu

Alt + F4 = Close Internet Explorer

Alt + Home = Open the Home page

Alt + Right Arrow = Move forward

Alt + Left Arrow = Move back

Ctrl + B = Organize Favorites

Ctrl + C = Copy

Ctrl + E = Open the Search bar

Ctrl + F = Find

Ctrl + H = Open the History bar

Ctrl + I = Open the Favorites bar

Ctrl + L = Open a new Web page, document or folder

Ctrl + N = Open a new window

Ctrl + O = Open a new Web page, document or folder

Ctrl + P = Print the active frame or current page

Ctrl + R = Refresh

Ctrl + S = Save

Ctrl + V = Paste

Ctrl + W = Close the window

Ctrl + Enterr = Add "www." To the beginning and ".com" to the end of the text in the Address bar

Tab = Move through the Address bar, Links bar, and the items on the Web page

Esc = Stop downloading a page

Shift + F10 = Display a shortcut menu for a link

Shift + Tab = Move back through the Address bar, Links bar, and the items on the Web page

F1 = Open Internet Explorer Help Keystroke Function

F4 = Expand the Address bar to display recently entered addresses

F5 = Refresh

F11 =Switch between full-screen and regular view of the browser windows


இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்....
நன்றி.


..................................................... பதிவுப் படம்..........................................

கல்லூரியில் அவளை முதலில் பார்த்த போது....




மானே என்றேன்..
மானங்கெட்டவனே என்றாள் -
மனம் தளரவில்லை.

கண்ணே என்றேன்..
போடா கழுதை என்றாள் -
நான் கலங்கவில்லை.

நீயின்றி நானில்லை என்றேன்..
இல்லாமல் போகப்போகிறாய் என்றாள் -
அவளை விட்டு நகரவில்லை.

என் உலகமே நீதான் என்றேன்..
உன்னை உதைக்கப் போகிறேன் என்றாள் -
அவளை உதறவில்லை

அழகாய் இருக்கிறாய் என்றேன்..
அடி வாங்கப் போகிறாய் என்றாள் -
அவளை அலட்சியப் படுத்தவில்லை

என் அகிலமும் நீ தான் என்றேன்
சற்றும் யோசிக்காமல்
அண்ணா ...என்றாள்
பேசாமல் திரும்பி வந்துவிட்டேன்....

இதுக்கும் மேல அங்க நின்னா நமக்கு என்ன மரியாதை ...