பெருமழைக்காலம் - மழையாலானவை




து
ளி
து
ளியாய்
தன்னைத் தொலைத்துக்கொண்டிருந்த
மழையை
ரசித்துக்கொண்டிருந்தவள்,
பொறுமையிழந்து 
மெதுவாய் சாரளம் திறந்து
கைநீட்டி துளி தொட ஆரம்பித்த,
அடுத்த கணத்தில்
அதற்க்காகவே காத்திருந்தது போலவே
பெய்யெனப் பெய்யத் துவங்குகிறது
பெருமழையொன்று...

படம் : இணையத்திலிருந்து

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... அருமை...
மழையில் நனையத் துடிக்கிறது மனசு...