என் இனிய தீபாவளி

நினைவு தெரிந்த நாளிலிருந்து வருடந்தோறும் தீபாவளி தன் இயல்பு மாறாமல் வந்து போய்க் கொண்டே தானிருக்கிறது, நான் தான் பட்டாசுகள், பலகாரங்கள், புத்தாடைகள், புதுப்படங்கள், நண்பர்களுடனான கும்மாளங்கள், குடும்பத்தினருடனான கொண்டாட்டங்கள் என ஒவ்வொரு பருவத்திலும் ஏதாவது ஒன்றிற்கான தேடல்களுடனும், ஏக்கத்துடனும் ஒரு பார்வையாளனாகவே ஒவ்வொரு வருடமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இப்போதென்னிடம் எல்லாம் இருந்தும், எப்போதும் போலவே இப்போதும் கொண்டாடி மகிழ இயலாமல் அனைத்திலிருந்தும் தூரமாய் தனிமையில் நான் இருப்பதால் இம்முறை உன்னை சற்றே பெரிய ஏக்கத்துடன் அனுப்பி வைக்கிறேன். அடுத்த முறை உன்னை என் குடும்பத்துடன் சந்திக்கிறேன் இப்போது சென்று வா என் இனிய தீபாவளியே. :)

0 comments: