மன்னாதி மன்னன் 3 - பாபர் - தொடர்பதிவு..

22 வயது பாபருக்கு 17 வயதில் மகனா..? என்று கடந்த மன்னாதி மன்னன் பதிவில் பெயர் தெரியாத அன்பர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.. பதிவின் நீளம் கருதி பாபரின் மண வாழ்க்கை, போர்முறைகள் உட்ப்பட பல விசயங்களை சுருக்க வேண்டியிருந்ததால் சொல்ல முடியாமல் போனது. கடந்த பதிவுகளில் சொல்லாமல் விட்டு போன வரலாற்று தகவல்கள் இவை..


பாபரின் முதல் திருமணம் 16 ம் வயதில் ஆயேஷா பேகம் என்ற பெண்ணுடன் நடந்தது, விதியின் விளையாட்டாலும், பல லட்சியங்கள் மற்றும் கனவுகளாலும் இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போனது. பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் படுக்கையறையில் நுழைந்தேன், அதுவும் தான் தாயார் கண்டித்துக் கொண்டதால் தான் என்று பாபரே தான் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். (இது போன்ற காரணங்களால் சில ஆண்டுகளில் முதல் மனைவி பாபரை பிரிந்து சென்று விட்டதாக வரலாற்று செய்திகள் குறிப்பிடுகின்றன.)


கி.பி 1504 ம் ஆண்டு காபூல் அரியணையில் ஏறிய பாபர் காபூல் மற்றும் இந்தியாவில் எழு பெண்களை மணந்தார், இவர்களால் மொத்தம் 17 குழந்தைகள் பிறந்தன, அதில் ஏட்டு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன. கி.பி 1508 ல் பாபரின் மனைவிகளில் ஒருவரான மாஹின் பேகம் என்ற பெண்மணிக்கு பிறந்தவர் தான் பானிபட் யுத்தத்தில் முக்கிய தளபதியாக இருந்து வெற்றிக்கு வழிவகுத்த ஹீமாயூன்.


கி.பி 1519 இந்தியாவில் நுழைந்த பாபரை, உதவிக்கு அழைத்த தௌலத்ஹான் எதிர்த்து நின்றதால் காபூலுக்கு திரும்பும் நிலை ஏற்ப்பட்டது. பின்னர் சில ஆண்டுகள் கழித்து ஒரு பெரும் படையை திரட்டிக் கொண்டு டிசம்பர் 15 கி.பி 1525 பாபர் சிந்து சமவெளியை கடந்தா பாபர் முதல் வேலையாக எதிர்த்த தௌலத்ஹானை வென்று நண்பனாக்கிக் கொண்டார். தொடர்ந்து டெல்லியை ஆண்ட இப்ராஹாம் லோடியுடன் வரலாற்று பிரசித்தி பெற்ற பானிபட் யுத்தத்திற்கு போர் முரசு கொட்டியது ஏப்ரல் 21 - கி.பி 1526 . இந்த போரில் பல்லாயிரகணக்கான வீரர்களை கொன்று போரில் வென்று இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்திற்கு வித்திட்ட கதை தான் உங்களுக்கு தெரியுமே... தெரியாதவர்கள் இதற்கு முன்பு எழுதிய மன்னாதி மன்னன் - பாபர் - தொடர்பதிவு.. மற்றும் மன்னாதி மன்னன் 2 - பாபர் - தொடர்பதிவு.. இந்த இரண்டு பதிவுகளை இயன்றால் படியுங்கள்...


டிஸ்கி:- என்றோ வாழ்ந்து செத்து போன மன்னனோட கதைய இப்படி போட்டு இழுத்தடிக்கிறான் என்று என் மீது கோபப்படும் அன்பு நெஞ்சங்களுக்கு... தொடரும் அப்படின்னு போட்டு சுவாரசியமா கொண்டு போறதுக்கு இது சிறு தொடர்கதையோ, சின்ன திரை சீரியலோ இல்லை.. வரலாறு..(வரலாறு முக்கியம் மக்களே) இதை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றவும் முடியாது, விசயங்களை மறைக்கவும் முடியாது.. ஆகையால் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மகிழ்ச்சியுடன் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறேன்...

...முந்தைய மன்னாதி மனனின் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்..

60 comments:

பனித்துளி சங்கர் said...

அன்பின் ஜெயந்த் அவர்களுக்கு மன்னர் பாபர் பற்றி சிறிதளவு மட்டுமே படித்திருக்கிறேன் . ஆனால் உங்களின் இந்த பாபர் பற்றிய தொடர் பதிவு அவரை பற்றி முழுமையாக அறிந்துகொள்வதற்கு மிகவும் எளிதாக அமைந்திருக்கிறது . தொடர்ந்து எழுதுங்கள் பின் தொடர்கிறேன் அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் .பகிர்வுக்கு நன்றி

வினோ said...

நண்பா நீங்க நடுத்துங்க.. நல்லா இருக்கு...

RVS said...

நிக்கா ஆகி பாபர் பதினைந்து நாளைக்கு ஒரு தரம் தான் படுக்கையறை போனார் என்ற சரித்திர முக்யத்துவம் வாய்ந்த செய்திக்கு நன்றி. :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

ஜில்தண்ணி said...

போற போக்க பாத்தா ஒரு வார இதழ் ஆரம்பிச்சிடலாம் போல :)

எல்லாமே தொடரா ஓடிக்கிட்டு இருக்கு :)

ஜில்தண்ணி said...

/// இந்தியாவில் எழு பெண்களை மணந்தார், இவர்களால் மொத்தம் 17 குழந்தைகள் பிறந்தன, அதில் ஏட்டு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன ///

அரசர்கள்னா இப்டிதானா ?? ரைட்டு

ஜில்தண்ணி said...

மாமா இந்த புத்தகம் எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்லயே ???

சுசி said...

:))))

Anonymous said...

ரிப்போர்ட்டரில் தொடராக மன்னர்களின் லீலைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அது போன்ற இந்த மன்னாதி மன்னர்கள் தொடர் மிகவும் பிடித்து விட்டது.இந்த மன்னர்கள் செய்த திருவிளையாடல்கள்,குறும்புகள்,சேட்டைகளையும் வெளியிடுங்கள்.வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க..

Anonymous said...

பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் படுக்கையறையில் நுழைந்தேன், அதுவும் தான் தாயார் கண்டித்துக் கொண்டதால் தான் என்று பாபரே தான் சுயசரிதை//
அடக்கி வாசிச்ச சுய சரிதைனு நினைக்கிறேன்.சுய சரிதைனாலே அப்படித்தானே?

Anonymous said...

பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் படுக்கையறையில் நுழைந்தேன், அதுவும் தான் தாயார் கண்டித்துக் கொண்டதால் தான் என்று பாபரே தான் சுயசரிதை//
அடக்கி வாசிச்ச சுய சரிதைனு நினைக்கிறேன்.சுய சரிதைனாலே அப்படித்தானே?

Anonymous said...

நிறைய தகவல்கள் நண்பா ;)
அவரது போர் முறைகளைப் பற்றியும் கொஞ்சம் எழுது நண்பா!

Anonymous said...

என்றோ வாழ்ந்து செத்து போன மன்னனோட கதைய இப்படி போட்டு இழுத்தடிக்கிறான் என்று என் மீது கோபப்படும் அன்பு நெஞ்சங்களுக்கு... தொடரும் அப்படி//
பயமே வேண்டாம்.போட்டுத்தாக்குங்க,என்ன பாடப்புத்தக வரலாறு மாதிரி இல்லாம இருந்தா போதும்

VELU.G said...

பாபர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்

தொடருங்கள் நண்பரே

அன்பரசன் said...

//தொடரும் அப்படின்னு போட்டு சுவாரசியமா கொண்டு போறதுக்கு இது சிறு தொடர்கதையோ, சின்ன திரை சீரியலோ இல்லை.. வரலாறு.//

சூப்பர் ஜெயந்த்

சௌந்தர் said...

என்றோ வாழ்ந்து செத்து போன மன்னனோட கதைய இப்படி போட்டு இழுத்தடிக்கிறான் என்று என் மீது கோபப்படும் அன்பு நெஞ்சங்களுக்கு.///

கோபம் எல்லாம் கிடையாது எங்களுக்கு தெரியாத தகவல் நீங்க சொல்வது தொடருங்கள்

அருண் பிரசாத் said...

ஜெயந்த்

பாபர் ருக்கு பார்பர் இல்லைய்யா தாடி எடுக்காம இருக்கறாரு?

சரித்திர சந்தேகம்பா, பதில் அளிக்க கடமை பட்டு இருக்கீங்கல்ல...

ஜெயந்த் கிருஷ்ணா said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...@@@@

மிக்க நன்றி நண்பரே... வருகைக்கும் வாசிப்பிற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

நண்பா நீங்க நடுத்துங்க.. நல்லா இருக்கு...

//

நன்றி நண்பா... எல்லாம் உன் ஆசி தான்..

செல்வா said...

ஆஹா , தொடருங்க ..
//இந்தியாவில் எழு பெண்களை மணந்தார், இவர்களால் மொத்தம் 17 குழந்தைகள் பிறந்தன, அதில் ஏட்டு குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தன ///

இப்பூடிஎல்லாமா இருந்தாங்க ..?

ஜெயந்த் கிருஷ்ணா said...

RVS said...

நிக்கா ஆகி பாபர் பதினைந்து நாளைக்கு ஒரு தரம் தான் படுக்கையறை போனார் என்ற சரித்திர முக்யத்துவம் வாய்ந்த செய்திக்கு நன்றி. :):):)

அன்புடன் ஆர்.வி.எஸ்.

//

ஆமாம் சகோதரா.. வரலாறுகள் முக்கியம்..

செல்வா said...

//நிக்கா ஆகி பாபர் பதினைந்து நாளைக்கு ஒரு தரம் தான் படுக்கையறை போனார் என்ற சரித்திர முக்யத்துவம் வாய்ந்த செய்திக்கு நன்றி. :):):)///
உங்களுக்கு நக்கலா தெரியுதா ...?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

போற போக்க பாத்தா ஒரு வார இதழ் ஆரம்பிச்சிடலாம் போல :)

எல்லாமே தொடரா ஓடிக்கிட்டு இருக்கு :)

//

வந்தாலும் வரலாம்... இந்த தொடர்பதிவே நீ ஆரம்பிச்சது தானே நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அரசர்கள்னா இப்டிதானா ?? ரைட்டு
\
//

எல்லாம் பதவி மச்சி.. பதவி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாமா இந்த புத்தகம் எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்லயே ???

//

முதல் பாகத்திலையே சொன்னேன் ... நீ பாக்கலையா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said...

:))))

//

வருகைக்கு நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரிப்போர்ட்டரில் தொடராக மன்னர்களின் லீலைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.அது போன்ற இந்த மன்னாதி மன்னர்கள் தொடர் மிகவும் பிடித்து விட்டது.இந்த மன்னர்கள் செய்த திருவிளையாடல்கள்,குறும்புகள்,சேட்டைகளையும் வெளியிடுங்கள்.வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க..

//

நன்றி சகோதரா... தங்கள் வருகைக்கும்.. ஊக்கத்திற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அடக்கி வாசிச்ச சுய சரிதைனு நினைக்கிறேன்.சுய சரிதைனாலே அப்படித்தானே?

//

ஒருவேளை அப்படி கூட இருக்கலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

நிறைய தகவல்கள் நண்பா ;)
அவரது போர் முறைகளைப் பற்றியும் கொஞ்சம் எழுது நண்பா!

//

நன்றி நண்பரே.. நிச்சயமாக எழுதலாம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...
பயமே வேண்டாம்.போட்டுத்தாக்குங்க,என்ன பாடப்புத்தக வரலாறு மாதிரி இல்லாம இருந்தா போதும்
//

உங்களை மாதிரி நல்ல உள்ளங்கள் பக்கபலமா இருக்கும் போது எனக்கென்ன கவலை....

ஜெயந்த் கிருஷ்ணா said...

VELU.G said...

பாபர் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்

தொடருங்கள் நண்பரே

//

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்பரசன் said...@@@


வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி சகோதரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

கோபம் எல்லாம் கிடையாது எங்களுக்கு தெரியாத தகவல் நீங்க சொல்வது தொடருங்கள்

//

நீ சொன்னால் நோ அப்பீல் நண்பா...

Chitra said...

தொடரும் அப்படின்னு போட்டு சுவாரசியமா கொண்டு போறதுக்கு இது சிறு தொடர்கதையோ, சின்ன திரை சீரியலோ இல்லை.. வரலாறு..(வரலாறு முக்கியம் மக்களே) இதை நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றவும் முடியாது, விசயங்களை மறைக்கவும் முடியாது..


..... சின்ன திரை சீரியல் என்று சொல்லி ... தரத்தை குறைச்சிக்கிறீங்க.... இதை நாங்கள் கண்டிக்கிறோம். சுவாரசியமாக இருக்கும் ஒரு தொடரை, தொடர்ந்து எழுதி அசத்த வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

ஜெயந்த்

பாபர் ருக்கு பார்பர் இல்லைய்யா தாடி எடுக்காம இருக்கறாரு?

சரித்திர சந்தேகம்பா, பதில் அளிக்க கடமை பட்டு இருக்கீங்கல்ல...

//


அடப்பாவி..அடப்பாவி.. சந்தேகம் கேட்க்க சொன்னா இப்படியெல்லாமா சந்தேகம் கேக்குறது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

இப்பூடிஎல்லாமா இருந்தாங்க ..?

//

சரித்திரத்தில இதெல்லாம் சாதாரணமப்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...

//நிக்கா ஆகி பாபர் பதினைந்து நாளைக்கு ஒரு தரம் தான் படுக்கையறை போனார் என்ற சரித்திர முக்யத்துவம் வாய்ந்த செய்திக்கு நன்றி. :):):)///
உங்களுக்கு நக்கலா தெரியுதா ...?

//

கொவப்படாதே செல்வா...அவரு எதுவும் தப்பா கேட்டது மாதிரி தெரியலையே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

..... சின்ன திரை சீரியல் என்று சொல்லி ... தரத்தை குறைச்சிக்கிறீங்க.... இதை நாங்கள் கண்டிக்கிறோம். சுவாரசியமாக இருக்கும் ஒரு தொடரை, தொடர்ந்து எழுதி அசத்த வாழ்த்துக்கள்!

//

ஐயையோ... மனித்து விடுங்கள் சகோதரி... இன்று அதிக மக்களின் கவனத்தை(கண்ணீரையும்) ஈர்ப்பது இந்த சின்ன திரை சீரியல் தான்... (இதனால்ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி சொல்லாமலே தெரியும் என நினைக்கிறேன்.. )

நிச்சயமாக எதிர்பார்க்கலாம் இன்னும் ஒரு தொடர் ...வருக்கைக்கு நன்றி சகோதரி...

Ahamed irshad said...

நல்லா எழுதியிருக்கே ராசா அருமை..

ஜெய்லானி said...

வ்ரலாறு ரொம்ப முக்கியம் ..

Jerry Eshananda said...

cool jeyanth...

a said...

//
டிசம்பர் 15 கி.பி 1525 பாபர் சிந்து சமவெளியை கடந்தா பாபர்
//
இது வரலாற்று செய்தி...

2010 சிந்து சமவெளியை பார்த்தா என்ன நடக்கும்ண்ணு உ.த பதிவுல எழுதி இருக்காரு......
http://truetamilans.blogspot.com/2010/09/blog-post_04.html

மங்குனி அமைச்சர் said...

என்றோ வாழ்ந்து செத்து போன மன்னனோட கதைய இப்படி போட்டு இழுத்தடிக்கிறான் என்று என் மீது கோபப்படும் அன்பு நெஞ்சங்களுக்கு... ////

நல்ல பதிவுதான் , தொடருங்கள் ("வந்தார்கள் வென்றார்கள்" படித்திருக்கிறீர்களா ?)

அண்ணாமலை..!! said...

"விதியின் கால்களில் உதைபடும் பந்தாக பாபர் அங்கும், இங்குமாக அலைக்கழிக்கப்பட்டார்" - என்று
மதன் பாபரை வர்ணித்திருப்பார்.

அதுபோலவே,
உங்கள் எழுத்துநடையும் நன்றாகவே இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அஹமது இர்ஷாத் said...

நல்லா எழுதியிருக்கே ராசா அருமை..

///

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெய்லானி said...

வ்ரலாறு ரொம்ப முக்கியம் ..

//

கண்டிப்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
டிசம்பர் 15 கி.பி 1525 பாபர் சிந்து சமவெளியை கடந்தா பாபர்
//
இது வரலாற்று செய்தி...

2010 சிந்து சமவெளியை பார்த்தா என்ன நடக்கும்ண்ணு உ.த பதிவுல எழுதி இருக்காரு......
http://truetamilans.blogspot.com/2010/09/blog-post_04.html

//

படித்தேன் சகோதரா... அது சிந்து சமவெளி இல்லை... சங்கட சமவெளி,,

வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெரி ஈசானந்தன். said...

cool jeyanth...

//

Thanks Bro..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைசர் said...

நல்ல பதிவுதான் , தொடருங்கள் ("வந்தார்கள் வென்றார்கள்" படித்திருக்கிறீர்களா ?)

//

நன்றி அமைச்சரே... வரலாறுகள் பற்றி உங்களுக்கு சொல்லியா தர வேண்டும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அண்ணாமலை..!! said...

"விதியின் கால்களில் உதைபடும் பந்தாக பாபர் அங்கும், இங்குமாக அலைக்கழிக்கப்பட்டார்" - என்று
மதன் பாபரை வர்ணித்திருப்பார்.

அதுபோலவே,
உங்கள் எழுத்துநடையும் நன்றாகவே இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள்!

//

மிக்க நன்றி சகோதரா... இந்த தொடரை எழுத எனக்கு உதவியது மதனின் வந்தார்கள் வென்றார்கள்.. தான்..

விஜய் said...

நண்பா வெறும்பய அப்டின்னு பெயரை வைசுகிட்டு, நிஜமா கலக்கி இருக்கீங்க, எவ்வளவு புத்தகத்தை படிச்சீங்க, நிஜமா நிறையா படிச்சு இருக்கீங்க போல..வரலாறு முக்கியம் அமைச்சரே அப்டின்னு சொல்லுற மாதிரி, எங்களுக்கு வரலாறு தெரிஞ்சுக்க உதவி இருக்கீங்க நண்பா..இன்னும் நிறையா எழுதுங்க ...

r.v.saravanan said...

பாபர் பற்றிய தொடர் பதிவு அருமை நண்பரே தொடருங்கள்
எனது தளத்திற்கு வருகை தந்தமைக்கும் நன்றி

Sriakila said...

// பாபர் முதல் வேலையாக எதிர்த்த தௌலத்ஹானை வென்று நண்பனாக்கிக் கொண்டார்//

இது ஒரு நல்ல சிந்தனை. வெறும்பய பதிவும் அருமை. நன்றாக இருக்கிறது பாபர் தொடர். தொடர்ந்து எழுதுங்கள். ஆவலோடு இருக்கிறோம்.

Jey said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்...

Unknown said...

தொடர்ந்து எழுதுங்கள்
நாங்கள் பின் தொடர்ந்து வருகிறோம்.
வரலாற்று சம்பவம்.படிப்பதற்கு
சுவையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

Mohamed Faaique said...

அந்த மகன் மேட்டர் நான்தான் கேட்டேன் .. தகவலுக்கு நன்றி...

Ramesh said...

Arumaiya yeludhi irukkeenga valthukkal.

Jaleela Kamal said...

பதிவ படிக்க நேரமில்லை, நோன்பு கழித்து முடிந்த போது படித்து கமெண்ட் இடுகிறேன்.
என் பக்கம் தொடர் வகைக்கும், கமெண்ட்க்கும் மிக்க நன்றி

Unknown said...

பாபரின் முதல் திருமணம் 16 ம் வயதில் ஆயேஷா பேகம் என்ற பெண்ணுடன் நடந்தது//

என்னமா வாழ்ந்திருக்கான் பயபுள்ள!!நாமளும் இருக்கோமே!!என்ன சொல்றீங்க!

Haiku charles said...

Nalla irukku
thodarungal

pinkyrose said...

என்ன வெறும்பய்யா...

வரலாறுல பின்னுறீங்க...

“பதிவுலகில் நான் ...”தொடர் பதிவுக்கு
என்னை அழைத்தமைக்கு நன்றி நண்பா...