தோழியின் கிறுக்கல்கள் 2 - எங்கே கற்றாயடா...


இந்த நாள் இத்தனை
அழகாய் மலரும் என்று
நானறியவில்லை...

அடிவானின்
விடிவெள்ளியை கூட
வெற்றுப் பார்வையால்
துழாவிக் கொண்டிருந்தேன்...

தேர்வு தந்த
நட்ச்சத்திரங்களுக்கு கூட
என்னை உயிர்பிக்கும்
திராணியில்லை...

முந்தைய நாளின்
பாரங்கள் நெஞ்சை அழுத்த
இதயம்
விம்மிக் கொண்டிருந்தது...

தாங்கவொண்ண
ஒரு கணத்தில்
நான் உன்னை அழைத்தேன்...

அப்பொழுது கூட இந்த நாள்
இத்தனை அழகாய் விடியுமென
நினைக்கவில்லை...

அலைபேசி
உன் பெயர் சுமந்து
அதிர ஆரம்பிக்க... என் இதயமும்..

ஹய்யய்யோ இதென்ன..

ஒட்டுமொத்த இனிமையும்
என் செவிப் பறைகளை
அடைந்து விட்டதா...

வார்த்தைகளெல்லாம்
தொண்டை குழிக்குள்
சிக்கிக் கொண்டனவா..

நீயோ சர்வ சாதாரணமாய்
கூல் என்கிறாய் ..
நான் இங்கே உறைந்து போனது
தெரியாமல்..

சிரிக்கிறாய்...
நான் இங்கே சிதறியதும்,
சிதறுவதும் தெரியாமல்..

வானவில்லும்,
வண்ணத்துப்பூச்சிகளும்,
வண்ணப்பூக்களும் மீட்டாத
என் வசந்தத்தை மீட்டி
சிரிக்கின்றன உன் வார்த்தைகள்..

குரலிலே
கரைத்து உயிர்பிக்கும் இந்த
வித்தையை
எங்கே கற்றாயடா ..

87 comments:

sathishsangkavi.blogspot.com said...

Me the First....

sathishsangkavi.blogspot.com said...

//அலைபேசி
உன் பெயர் சுமந்து
அதிர ஆரம்பிக்க... என் இதயமும்..//

கவிதை ரொம்ப அனுபவிச்சு எழுதுனுது போல இருக்கு....

//சிரிக்கிறாய்...
நான் இங்கே சிதறியதும்,
சிதறுவதும் தெரியாமல்..//

ரசித்தேன்... நினைவுகளில் நனைந்தேன்...

ஜில்தண்ணி said...

என்னது இது போன தடவயே தோழிய காதலி ஆக்கிபுட்டு

திரும்ப என்ன தோழி கிறுக்கல்கள் யோவ் கா...கா...காதலி கிறுக்கல்னு போடுயா :)

dheva said...

தம்பி....இந்த இந்த மிரட்டலைத்தான் எதிர்பார்த்தென்....அற்புதமாய் வந்திருக்கிறது. ...கவிதை.. ! இந்த உணர்வை விட்டு விடாதே இறுக பற்றிக் கொள்...ஓராயிரம் படைப்புக்கள் ஓடிவரும்....

//வானவில்லும்,
வண்ணத்துப்பூச்சிகளும்,
வண்ணப்பூக்களும் மீட்டாத
என் வசந்தத்தை மீட்டி
சிக்கின்றன உன் வார்த்தைகள்...//

உயிர் இங்கு இருக்கிறது......! வாழ்த்துக்கள் பா!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

super........

சௌந்தர் said...

அடிவானின்
விடிவெள்ளியை கூட
வெற்றுப் பார்வையால்
துழாவிக் கொண்டிருந்தேன்...///

இப்போ எப்படி இருக்கே நண்பா உடம்மை பார்த்து கொள் சரியா

ஜில்தண்ணி said...

///////////அலைபேசி
உன் பெயர் சுமந்து
அதிர ஆரம்பிக்க... என் இதயமும்.. ///

போட்டு தாக்கிட்டியே

செம செம

சௌந்தர் said...

சிரிக்கிறாய்...
நான் இங்கே சிதறியதும்,
சிதறுவதும் தெரியாமல்.////

எதுக்கு அவங்க சிரிக்கிறாங்க நீ சிதறுவதை பார்த்து சிரிக்கிறாங்க போல

ஜில்தண்ணி said...

///குரலிலே
கரைத்து உயிர்பிக்கும் இந்த
வித்தையை
எங்கே கற்றாயடா .///

மாப்பு மாப்பு அந்த வித்தைய எனக்கும் கத்துக் கொடு :) எதாவது வருதான்னு பாப்போம்

Mohamed Faaique said...

nallayirukku nanba...

சி.பி.செந்தில்குமார் said...

your rhyme is telling your love feelings and pain enormously,good shot

ஜெயந்த் கிருஷ்ணா said...

சங்கவி said...

Me the First....

//


அண்ணே வடை உங்களுக்கு தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சங்கவி said...

கவிதை ரொம்ப அனுபவிச்சு எழுதுனுது போல இருக்கு....

ரசித்தேன்... நினைவுகளில் நனைந்தேன்...

//

ரொம்ப நன்றி அண்ணா வருகைக்கும் வாசிப்பிற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்னது இது போன தடவயே தோழிய காதலி ஆக்கிபுட்டு

திரும்ப என்ன தோழி கிறுக்கல்கள் யோவ் கா...கா...காதலி கிறுக்கல்னு போடுயா :)

//

மச்சி சில விசயங்களா எடுத்தோம் கவுத்தொமுன்னு பண்ண கூடாது.. பாத்து பக்குவமா தான் செயல்படுத்தனும்...

Anonymous said...

நண்பா அருமையான கவிதை..
//குரலிலே
கரைத்து உயிர்பிக்கும் இந்த
வித்தையை//
செம தூள் தல!

ஜில்தண்ணி said...

வெறும்பய said...

// மச்சி சில விசயங்களா எடுத்தோம் கவுத்தொமுன்னு பண்ண கூடாது.. பாத்து பக்குவமா தான் செயல்படுத்தனும்... ////

அடப்பாவி கவுத்துட்டியே :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva said...

தம்பி....இந்த இந்த மிரட்டலைத்தான் எதிர்பார்த்தென்....அற்புதமாய் வந்திருக்கிறது. ...கவிதை.. ! இந்த உணர்வை விட்டு விடாதே இறுக பற்றிக் கொள்...ஓராயிரம் படைப்புக்கள் ஓடிவரும்....

உயிர் இங்கு இருக்கிறது......! வாழ்த்துக்கள் பா!

///

வாங்கண்ணா வாங்க... ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க... நம்ம ஏரியா வழி எதுவும் மறந்து போகலையே...

இனி தான் ஆட்டம் ஆரம்பம்..

ரொம்ப நன்றி அண்ணா உங்க வருகைக்கும்.. வாசிப்பிற்கும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

புதிய மனிதா said...

super........

//

Thanks Bro..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

இப்போ எப்படி இருக்கே நண்பா உடம்மை பார்த்து கொள் சரியா..

//

நண்பா..வயசாயிருசில்ல..

அம்பிகா said...

//சிரிக்கிறாய்...
நான் இங்கே சிதறியதும்,
சிதறுவதும் தெரியாமல்..//

ம்...ம்...
நல்லாயிருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

போட்டு தாக்கிட்டியே

செம செம


//
பாரட்டுரியா ஓட்டுறியா.. எதவா இருந்தாலும் சொல்லிட்டு செய் மச்சி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

எதுக்கு அவங்க சிரிக்கிறாங்க நீ சிதறுவதை பார்த்து சிரிக்கிறாங்க போல

//

இப்பெல்லாம் நம்மள பாத்தாலே சிரிப்பு தான் வருதாம்...

சௌந்தர் said...

இந்த கவிதைய உன் தோழியிடம் காண்பித்து அனுமதி பெற்ற பிறகே பதிவு செய்தாய் என்று உளவு துறை தகவல் வருகிறது

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

மாப்பு மாப்பு அந்த வித்தைய எனக்கும் கத்துக் கொடு :) எதாவது வருதான்னு பாப்போம்

//

அதெல்லாம் ரொம்ப ஈஸி மச்சி... நேத்தைக்கு இந்திரா கூட எழுதியிருந்தாங்களே...

கும்மாச்சி said...

//குரலிலே
கரைத்து உயிர்பிக்கும் இந்த
வித்தையை
எங்கே கற்றாயடா .. //



பின்னிட்டிங்க நண்பா

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mohamed Faaique said...

nallayirukku nanba...

//

நன்றி நண்பா...

ஜில்தண்ணி said...

///பாரட்டுரியா ஓட்டுறியா.. எதவா இருந்தாலும் சொல்லிட்டு செய் மச்சி...//

ரெண்டும் நமக்கு ஒன்னுதானே :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

இந்த கவிதைய உன் தோழியிடம் காண்பித்து அனுமதி பெற்ற பிறகே பதிவு செய்தாய் என்று உளவு துறை தகவல் வருகிறது

//

வர வர யார நம்புறதுன்னே தெரியல... பாரு அதுக்குள்ளே வெளிய சொல்லிட்டாங்க...

Ahamed irshad said...

நல்லாயிருக்கு ஜெயந்த்..

நீயோ சர்வ சாதாரணமாய்
கூல் என்கிறாய் ..
நான் இங்கே உறைந்து போனது
தெரியாமல்..//

.ரசித்த வரி

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி.பி.செந்தில்குமார் said...

your rhyme is telling your love feelings and pain enormously,good shot

//

Thanks Bro ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

நண்பா அருமையான கவிதை..

///

நன்றி சகோதரா வருகைக்கும்.. வாசிப்பிற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...


அடப்பாவி கவுத்துட்டியே :)

//

கூல் மச்சி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அம்பிகா said...

ம்...ம்...
நல்லாயிருக்கு.

//

நன்றி சகோதரி.. வருகைக்கும்.. வாசிப்பிற்கும்...

தமிழ் உதயம் said...

குரலிலே
கரைத்து உயிர்பிக்கும் இந்த
வித்தையை
எங்கே கற்றாயடா ..///////////

காதல் தான் எல்லாவற்றையும் கற்று கொடுத்து விடுகிறது. பிறகென்ன தெரியாதது போல் ஒரு கேள்வி.

ஜெயந்த் கிருஷ்ணா said...

கும்மாச்சி said...


பின்னிட்டிங்க நண்பா

//

நன்றி நண்பா.. இருந்தாலும் உங்க அளவு வர முடியுமா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்கு ஜெயந்த்..

.ரசித்த வரி

//

நன்றி நண்பரே... வருகைக்கும்.. உங்களுடைய அன்பின் வெளிப்பாடான விருதுக்கும்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...


ரெண்டும் நமக்கு ஒன்னுதானே :)

//

உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.. ஆனா மத்தவங்களுக்கு தெரியாதே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தமிழ் உதயம் said...

காதல் தான் எல்லாவற்றையும் கற்று கொடுத்து விடுகிறது. பிறகென்ன தெரியாதது போல் ஒரு கேள்வி.

//

உண்மை தான் தோழரே.. காதல் அனைத்தையும் கற்று கொடுக்கிறது.. (சில சமயங்களில் அக்கிரமங்களையும்.. வக்கிரங்களையும்..)

சௌந்தர் said...

வர வர யார நம்புறதுன்னே தெரியல... பாரு அதுக்குள்ளே வெளிய சொல்லிட்டாங்க..///

அந்த உளவு துறை நம்ம ஜில்லு தான்

Unknown said...

உயிரை மீட்டெடுக்கும் கவிதை ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...


அந்த உளவு துறை நம்ம ஜில்லு தான்..

//


ஜில்லா... இருக்காதே... எனக்கு செல்வா மேல தான் சந்தேகம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கே.ஆர்.பி.செந்தில் said...

உயிரை மீட்டெடுக்கும் கவிதை ...

//


நன்றி அண்ணா...

செல்வா said...

///அலைபேசி
உன் பெயர் சுமந்து
அதிர ஆரம்பிக்க... என் இதயமும்///

பட்டைய கிளப்பிட்டீங்க அண்ணா ..
உண்மையான உணர்வுகள் மாதிரியே இருக்கு ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

VELU.G said...

very nice

//

நன்றி சகோதரா.. வருகைக்கும் வாசிப்பிற்கும்..

ஜில்தண்ணி said...

@@சௌந்தர்

வர வர யார நம்புறதுன்னே தெரியல... பாரு அதுக்குள்ளே வெளிய சொல்லிட்டாங்க..///

என்னத்த சொல்லிட்டாங்க :)

மதி said...

//வார்த்தைகளெல்லாம்
தொண்டை குழிக்குள்
சிக்கிக் கொண்டனவா..

நீயோ சர்வ சாதாரணமாய்
கூல் என்கிறாய் ..
நான் இங்கே உறைந்து போனது
தெரியாமல்..//

ரொம்பவே நல்லா இருக்கு ....உங்க எழுத்துக்கள் ..

செல்வா said...

///உண்மை தான் தோழரே.. காதல் அனைத்தையும் கற்று கொடுக்கிறது.. (சில சமயங்களில் அக்கிரமங்களையும்.. வக்கிரங்களையும்..)
///
இதுவும் உண்மை தான் .. சில சமயங்களில் காதலினால் கொடுமைகள் நடக்கிறது..

Sriakila said...

தோழியின் கிறுக்கல்கள் 1


// நமக்கிடையில் எல்லைகளும்
வேலிகளும் இருந்தாலும்

பகிர்தலும்.. புரிதலுமாய்..
தேடலும்.. தெளிதலுமாய்...
தொடரட்டும் நம்

நட்பாக மா(ற்)றிய காதல்..//



தோழியின் கிறுக்கல்கள் 2

//ஒட்டுமொத்த இனிமையும்
என் செவிப் பறைகளை
அடைந்து விட்டதா...

வார்த்தைகளெல்லாம்
தொண்டை குழிக்குள்
சிக்கிக் கொண்டனவா..//


//சிரிக்கிறாய்...
நான் இங்கே சிதறியதும்,
சிதறுவதும் தெரியாமல்..//



இந்தத் தோழி (1)வேற, அந்தத் தோழி (2)வேறயா?

எது தோழி, எது காதலி?

'பரிவை' சே.குமார் said...

கவிதை ரொம்ப அனுபவிச்சு எழுதுனுது போல இருக்கு...

பட்டைய கிளப்பிட்டீங்க அண்ணா .

செல்வா said...

//ஜில்லா... இருக்காதே... எனக்கு செல்வா மேல தான் சந்தேகம்..///
ஐயோ .. நான் ஒண்ணும் பண்ணல .. நான் இப்பத்தான் வரேன் ..

ஜில்தண்ணி said...

// ஐயோ .. நான் ஒண்ணும் பண்ணல .. நான் இப்பத்தான் வரேன் .. ///

நானும் இல்ல செல்வாவும் இல்ல

ஒரு வேலை எதாவது பேய் பிசாசோட வேலையா இருக்குமோ :)

செல்வா said...

@ Jillu
மச்சி அது அந்த மொக்கையோட வேலையா இருக்கும் ..

வினோ said...

தோழி என்ற எண்ணமும்
தோள் சாய்க்க மனமும்
என்றுமே அழகான விடியல்கள்
தான் நண்பா...

கவிதை அருமை..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

என்னத்த சொல்லிட்டாங்க :)

//

நீ ரொம்ப நல்லவனாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மதி said...


ரொம்பவே நல்லா இருக்கு ....உங்க எழுத்துக்கள் ..

//


நன்றி வருகைக்கும்.. வாசிப்பிற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Sriakila said...

இந்தத் தோழி (1)வேற, அந்தத் தோழி (2)வேறயா?

எது தோழி, எது காதலி?

//

கேட்டு சொல்கிறேன் சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சே.குமார் said...

கவிதை ரொம்ப அனுபவிச்சு எழுதுனுது போல இருக்கு...

பட்டைய கிளப்பிட்டீங்க அண்ணா .

//

நன்றிங்க... அண்ணன் என்று என்னோட வயச கூட்டுறீங்களா.. இல்ல உங்க வயச குறசுக்கிரீங்களா ...


நான் நெசமாலுமே சின்னவன் தானுங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

நானும் இல்ல செல்வாவும் இல்ல

ஒரு வேலை எதாவது பேய் பிசாசோட வேலையா இருக்குமோ :)

//

இருக்கலாம்... செல்வா கனவுல வந்த பிசாசோட வேலையா இருக்கலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் said...


மச்சி அது அந்த மொக்கையோட வேலையா இருக்கும் ..

//

அதனால தான் உன்ன சொல்றேன்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வினோ said...

தோழி என்ற எண்ணமும்
தோள் சாய்க்க மனமும்
என்றுமே அழகான விடியல்கள்
தான் நண்பா...

கவிதை அருமை..

//

நன்றி நண்பா.. பின்னூட்டம் கூட கவிதை நடையில் அருமையா இருக்கிறது..

சுசி said...

அழகா இருக்குங்க.

ம.தி.சுதா said...

//.......தேர்வு தந்த
நட்ச்சத்திரங்களுக்கு கூட
என்னை உயிர்பிக்கும்
திராணியில்லை.......//
சகோதரா அப்படி நல்ல நித்திரையா.. சும்மா நகைச்சுவைக்கு சொன்னேன்... கவிதை அருமை வாழ்த்துக்கள்..

அரிஅரவேலன் (Ariaravelan) said...

காதற் கனவில் மிதக்கும் பொழுது ஏற்படும் சின்ன வியப்பை நீண்ட கவிதையில் பிடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

Kousalya Raj said...

//நீயோ சர்வ சாதாரணமாய்
கூல் என்கிறாய் ..
நான் இங்கே உறைந்து போனது
தெரியாமல்..//

யதார்த்தமான வரிகளில் அழகான கவிதை

அன்பரசன் said...

//சிரிக்கிறாய்...
நான் இங்கே சிதறியதும்,
சிதறுவதும் தெரியாமல்..//

ந‌ல்ல‌ வ‌ரிக‌ள் ஜெய‌ந்த்.

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

கவிதை கவிதையாய் இருக்கிறது...!உங்கள் வருகைக்காக எனது பக்கங்கள் காத்திருக்கிறது..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com

Jeyamaran said...

அசத்துறிங்க சரி யார் பாஸ் அது ?

அருண் பிரசாத் said...

யோவ்... நல்லாதானய்யா இருந்த திடீருனு என்ன ஆச்சு? கவிதைய பிச்சு உதறுற... ரைட்டு... கலக்கு...

Jey said...

கவிதயெல்லாம் எழுதுனா நான் எஸ்தான்...:)

கிராமத்துக் கல்யாணம் + மொய், http://pattikattaan.blogspot.com/2010/09/blog-post.html

எம் அப்துல் காதர் said...

ஃபீலிங்ஸ் ரொம்ப அருமை பாஸ்!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகு கவிதை

Unknown said...

'கூல்'...வாவ். அழகான கவிதை

a said...

ரொம்ப பீல் பண்ணி எழுதுன மாதிரி தெரியுது...

Unknown said...

சூப்பரா எழுதியிருக்கீங்க.. அழகான கவிதை..

Chitra said...

அலைபேசி
உன் பெயர் சுமந்து
அதிர ஆரம்பிக்க... என் இதயமும்..


.... good one!!! :-)

kunthavai said...

ரெம்ப அருமையா இருக்கு தம்பி.

சுஜா செல்லப்பன் said...

அருமையான கவிதை

‘அலைபேசி
உன் பெயர் சுமந்து
அதிர ஆரம்பிக்க... என் இதயமும்..
’--நான் ரசித்த வரிகள் ! வாழ்த்துக்கள் !!

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said...

அழகா இருக்குங்க.

///

நன்றி சகோதரி.. வருகைக்கும்.. வாசிப்பிற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம.தி.சுதா said...

சகோதரா அப்படி நல்ல நித்திரையா.. சும்மா நகைச்சுவைக்கு சொன்னேன்... கவிதை அருமை வாழ்த்துக்கள்..

//

Ha ha ha...

நன்றி சகோதரி.. வருகைக்கும்.. வாசிப்பிற்கும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

யரலவழள said...

காதற் கனவில் மிதக்கும் பொழுது ஏற்படும் சின்ன வியப்பை நீண்ட கவிதையில் பிடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

//

வருகைக்கு நன்றி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

@ Kousalya said...
@ அன்பரசன் said...
@ ♥♪•வெற்றி - VETRI•♪♥ said...
@ Jeyamaran said...
@ அருண் பிரசாத் said...
@ Jey said...
@ எம் அப்துல் காதர் said...
@ அப்பாவி தங்கமணி said...
@ கலாநேசன் said...
@ வழிப்போக்கன் - யோகேஷ் said...
@ பதிவுலகில் பாபு said...
@ Chitra said...
@ kunthavai said...
@ சுடர்விழி said...


அனைவரின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றிகள்...

Priya said...

ஆஹா அருமையான கவிதை. கடந்த முறை கவிதை படிக்க எதிர்பார்ப்போடு வந்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்( ஆனால் அந்த பதிவை(100கவிதைகள்) ரியலி ஐ என்ஜாய்ட்)
இப்போது நிஜமாகவே அழகான கவிதையை படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

மங்குனி அமைச்சர் said...

தேர்வு தந்த
நட்ச்சத்திரங்களுக்கு கூட
என்னை உயிர்பிக்கும்
திராணியில்லை...///

ரொம்ப அழகான வரிகள்

vinu said...

10th ooda 11 naaa sorry sorry

84loada 85vathaa inthaanga namma attendanceum

Unknown said...

இவ்வளவு காலமும் எங்க இருந்தீங்க பாஸ்??ரொம்ப மிஸ் பண்ணீட்டமோ ??எல்லா ஏரியா வும் போட்டு தாக்குறீங்களே!!

Anonymous said...

வானவில்லும்,
வண்ணத்துப்பூச்சிகளும்,
வண்ணப்பூக்களும் மீட்டாத
என் வசந்தத்தை மீட்டி
சிரிக்கின்றன உன் வார்த்தைகள்..//
அருமையான வரிகள் கவிஞர் வெறும் பயலை அடிக்கடி எதிர்பார்க்கிறோம்

r.v.saravanan said...

நல்லாருக்கே

ஒட்டுமொத்த இனிமையும்
என் செவிப் பறைகளை
அடைந்து விட்டதா..

நான் ரசித்த வரிகள்

வாழ்த்துக்கள் ஜெயந்த்