கடந்த ஆண்டு நினைவுகள்...

தொண்ணூறுகளின் இறுதியில் ஆரம்பித்த டைரி எழுதும் பழக்கம் 2010 களின் ஆரம்பத்திலிருந்து சோம்பேறித்தனத்தாலும் பதிவுலகின் அறிமுகத்தாலும் என்னிடமிருந்து வழக்கொழிந்து போய் விட்டது. ஆனாலும் ஒரு வருட டைரிக்குறிப்புகளை மொத்தமாய் ஒரே பதிவில் எழுதுவதும் சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது. 
  
ஒவ்வொரு வருடமும் நம்மை கடந்து செல்லும் பொது அதன் நினைவாக அவ்வருடத்தில் நடந்த சந்தோசம் அல்லது துக்கம் என ஏதாவது நினைவுகளை நமக்கு விட்டு தான் செல்கின்றன. இப்படி என்னை கடந்து சென்ற கால் நூற்றாண்டுகளுக்கும் மேலான வருடங்களில் கடந்த 2010 கொஞ்சம் அதிகமாகவே சந்தோசங்களையும், சிறிதும் பெரிதுமாய் பல துக்கங்களையும், இழப்புகளையும் அதன் நினைவாக தந்து விட்டு தான் சென்றன. 
 




கடந்த வருடத்தில் நடந்த மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் அண்ணனின் கல்யாணம் தான். கிடைத்த ஆறு நாள் விடுமுறையில் பத்திரிக்கை வைப்பது முதல்  அனைத்து வேலைகளையும் முன் நின்று நானே பார்த்துக்கொண்டதால்  உடலளவில் சில இடையூறுகள் வந்தாலும் மனதளவில் நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.  எங்கள் வீட்டில் நடந்த முதல் விசேஷம். அது மட்டுமல்லாமல் சுமார் பத்து வருடங்களுக்கு பின் குடும்பத்திலுள்ள சொந்த பந்தங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கிடைத்த வாய்ப்பு இது. சிறு வயதில் பார்த்து பயந்த அண்ணன்கள் மற்றும் உறவுகள் அனைவரும் அன்றைய தினத்தில் நண்பர்களாய் தெரிந்தார்கள்..  எப்போதும் ஆயிரம் பொய்கள் சொல்லி வருடத்திற்கொரு முறை ஊருக்கு வரும் நான்  கடந்த வருடம் தான் இன்னும் கொஞ்சம் அதிகமான பொய்கள் சொல்லி இரண்டு முறை இந்தியா வந்தேன்..

கடந்த வருடத்தின் மற்றொரு சந்தோசமான் விசயம் எனக்கு பதிவுலகம் அறிமுகமானது தான். வருடத்தின் மூன்றாவது  மாதம் வரை இப்படி ஓன்று இருப்பதே எனக்கு தெரியாது. அறை நண்பரின் உதவியால் அறிந்த பின்னர் ஏன் என்னால் எழுத முடியாது என்று எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டு துவங்கியது தான் இந்த வலைப்பூ. "வெறும்பய" என்ற பெயரை தேர்வு செய்வதற்கே கிட்ட தட்ட ஒரு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்..

பதிவுகள் எழுத ஆரம்பித்தது முதல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வரை என்னை இப்போதுள்ள் நண்பர்களுக்கு தெரியாது.. என்னை எவரும் அறிந்திரா காலகட்டத்தில்  தேவா அண்ணன் மூலமாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஓரிரு நண்பர்கள் கிடைத்தார்கள். பின்னர் சிறு துளி பெரு வெள்ளம் என்பது போன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நண்பர்கள் கூட்டம் வளர்ந்து கொண்டே போனது. இன்னும் வளர்ந்தபடி தான் இருக்கிறது.. இன்னார் இன்னாரென்று தான் என்று குறிப்பிட்டு செல்ல முடியாதபடி நண்பர்கள் பட்டாளமே  இருக்கிறது.  நண்பர்கள் மட்டுமல்லாமல் சகோதர்கள், சகோதரிகள், தோழிகள் என நான் பதிவுலகத்தால் பெற்ற உறவுகள் ஓராயிரம்.

பதிவுகலத்தால் நான் பெற்ற இன்னொரு பொக்கிஷம் வாசிப்பு.. சிறு வயதிலிருந்தே கொஞ்சம் கூட வாசிப்பு பழக்கமே கிடையாது.. இது வரைக்கும் நான் படித்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் பெரிய சைஸ் புத்தகங்கள் என்றால் கையில் தொடுவது கூட இல்லை. ஆனால் சமீபக் காலமாக எல்லாம் மாறி வருகிறது, பதிவுலகில் நல்ல பதிவுகளை தேடிப்படிப்பதொடு மட்டுமல்லாமல் புத்தகங்கள் தேடி நூலகங்களுக்கும் செல்லும் நிலை வந்துவிட்டது. இப்போது தான் நான் செய்த  ஆரம்பகால தவறுகள் தெரிகின்றன. வாசிப்பு அதிகமாகும் பொழுதுகளில்  எழுதுவது குறைந்து விடுகிறது. 

பதிவுலகமும் மற்ற பல விஷேசங்களும்   இந்த ஆண்டு முழுவதும் சந்தோசத்தை தந்தாலும் கடைசி மாதம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. முதல் வாரத்திலொரு நாள்  அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக  வந்து சேர்ந்த சகோதரனின் மரண சேதி, அதற்கு அடுத்தடுத்த  வாரத்தில் வந்த இரு கல்லூரி  நண்பர்களின் மரண சேதி மற்றும் வருடத்தின் கடைசி வாரத்தில் நடந்த பைக் விபத்தினால் இன்று வரை நினைவு திரும்பாத நிலையில் இருக்கும் நண்பன்   என கடந்த மாதம் முழுவதும்  வந்து சேர்ந்தது எல்லாமே துக்கச் செய்திகள் தான். கடந்த பதினோரு மாதத்தில் கிடைத்த மகிழ்வான தருணங்கள் அனைத்தையும் இந்த இழப்புகள் மூடி மறைத்து விட்டன.

இரவும் பகலும் கலந்து உருவாகும் ஒரு நாளை போல சந்தோசமும் துக்கமும் கலந்தது தான் வாழ்க்கையாக இருந்தாலும் நானும் ஒரு சராசரி மனிதனான காரணத்தால் இழப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத அடுத்து வரும் வருடங்களை எதிர்பார்த்துக் கொண்டு  இந்த நாட்குறிப்பு முற்று பெறுகிறது.

திரும்பி பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்து கடந்த காலத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்திய சகோதரி கௌசல்யா அவர்களுக்கு நன்றி..


படம் உதவி நண்பர் - எஸ்.கே

180 comments:

dheva said...

அருமையான திரும்பிப் பார்க்கிறேன் தம்பி...

நான் பார்த்தவரைக்கும் வெறும்பயன்னு பேர வச்சுகிட்டு...எக்கச்சக்கா எழுதுற ஆளு நியாத்தான் இருப்ப...

சீராக உன்னோட எழுத்தின் நடையும் வசீகரமும் மாறியதை கண்கூடாக பார்த்தவன் நான். 100 வது போஸ்ட் மட்டும் இல்லப்பா.. இன்னும் நிறைய எழுதி எப்பவுமே ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்னு நீ........

வாழ்த்துக்கள் பா!

மாணவன் said...

இந்தா வந்துட்டோம்ல........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

இந்தா வந்துட்டோம்ல........//

me too

ஜெயந்த் கிருஷ்ணா said...

நானும் இங்கே தான் இருக்கேன்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உடலளவில் சில இடையூறுகள் வந்தாலும் மனதளவில் நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். //

ஏன் மகிழ்ச்சியா இருக்காது. உனக்கு லைன் கிளியர் ஆகுதே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பின் குடும்பத்திலுள்ள சொந்த பந்தங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கிடைத்த வாய்ப்பு இது//

அத்த பொண்ணுங்க வந்திருக்கும். ஜொள்ளு விட்டுருப்ப

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உடலளவில் சில இடையூறுகள் வந்தாலும் மனதளவில் நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். //

ஏன் மகிழ்ச்சியா இருக்காது. உனக்கு லைன் கிளியர் ஆகுதே

//

ச்சீ போங்க எனக்கு வெக்கமா இருக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"வெறும்பய" என்ற பெயரை தேர்வு செய்வதற்கே கிட்ட தட்ட ஒரு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்..//

இதுக்காக ஒருமாசம் வெறும்பயலா வாழ்ந்து காட்டிருக்க. கேரக்டராவே மாறிட்டாரு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பின்னர் சிறு துளி பெரு வெள்ளம் என்பது போன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நண்பர்கள் கூட்டம் வளர்ந்து கொண்டே போனது. //

Like ur size? hehe

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பின் குடும்பத்திலுள்ள சொந்த பந்தங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கிடைத்த வாய்ப்பு இது//

அத்த பொண்ணுங்க வந்திருக்கும். ஜொள்ளு விட்டுருப்ப

//

சொல்லப்போனா அதுவும் ஒரு காரணம் தான்... நமக்கு ஏதாவது செட் ஆகணுமில்ல...

சௌந்தர் said...

என்ன நண்பா அதுக்குள்ள முடிந்து விட்டது படிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது...உனக்கு இந்த வருடமும் சிறப்பாக அமைய வேண்டும்....

மாணவன் said...

கடந்த கால நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்
அதுவும் கடைசி மாதம் உங்கள் நண்பர்களுக்கு நடந்த நிகழ்வுகள் படிக்கும்போதே மனது கனக்கிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடந்த கால நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்
அதுவும் கடைசி மாதம் உங்கள் நண்பர்களுக்கு நடந்த நிகழ்வுகள் படிக்கும்போதே மனது கனக்கிறது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

"வெறும்பய" என்ற பெயரை தேர்வு செய்வதற்கே கிட்ட தட்ட ஒரு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்..//

இதுக்காக ஒருமாசம் வெறும்பயலா வாழ்ந்து காட்டிருக்க. கேரக்டராவே மாறிட்டாரு

//

ஆமா ஆமா.. இருக்காத பின்ன...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

என்ன நண்பா அதுக்குள்ள முடிந்து விட்டது படிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது...உனக்கு இந்த வருடமும் சிறப்பாக அமைய வேண்டும்....

//

நன்றி நண்பா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

கடந்த கால நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்
அதுவும் கடைசி மாதம் உங்கள் நண்பர்களுக்கு நடந்த நிகழ்வுகள் படிக்கும்போதே மனது கனக்கிறது...

//

நன்றி மாணவரே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த வருடம் ஜோதி ஒளிரட்டும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடந்த கால நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்
அதுவும் கடைசி மாதம் உங்கள் நண்பர்களுக்கு நடந்த நிகழ்வுகள் படிக்கும்போதே மனது கனக்கிறது...

//

இந்த காப்பி பேஸ்ட் பண்ற பொழப்புக்கு... நாண்டு கிட்டு..#@%$@%^#%

மாணவன் said...

நல்லாதான் எழுதியிருக்கீங்க அப்படியே எனக்கும் இந்த டைரிகுறிப்ப எழுதிகொடுத்திடுங்க....ஹிஹி

நம்மள வேற தொடர்பதிவுக்கு கூப்புட்டுருக்காங்க... நாம என்னைக்கு டைரி எழுதியிருக்கோம்...

சௌந்தர் said...

நண்பா சிங்கப்பூரில் ஒரு பிளசாவுக்கு போனதை பற்றி சொல்லவே இல்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடந்த கால நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்
அதுவும் கடைசி மாதம் உங்கள் நண்பர்களுக்கு நடந்த நிகழ்வுகள் படிக்கும்போதே மனது கனக்கிறது...

//

இந்த காப்பி பேஸ்ட் பண்ற பொழப்புக்கு... நாண்டு கிட்டு..#@%$@%^#%///

மாணவன் உன்னைத்தான் சொல்றான்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த வருடம் ஜோதி ஒளிரட்டும்

//

எல்லாம் உங்க ஆசி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Come to Vaigai blog. வைகை அண்ணன் பிகர் செட் பண்ணி தராராம்

மாணவன் said...

//இந்த காப்பி பேஸ்ட் பண்ற பொழப்புக்கு... நாண்டு கிட்டு..#@%$@%^#%//

விடுங்கண்ணே நம்ம போலீசுதானே....

வைகை said...

கடைசி மாத சோகத்தில் ஒரு நிகழ்வை விட்டாச்சு? என்னையும் மாணவனையும் சந்திச்சத!!

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த வருடம் ஜோதி ஒளிரட்டும்///

இது அந்த ஜோதியா இல்லை வேற ஜோதியா....

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Come to Vaigai blog. வைகை அண்ணன் பிகர் செட் பண்ணி தராராம////


என்னய்யா அநியாமா இருக்கு?

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

நண்பா சிங்கப்பூரில் ஒரு பிளசாவுக்கு போனதை பற்றி சொல்லவே இல்லை

//

அதுக்கென்ன நான் பா... அடுத்த பதிவுல போட்டா போச்சு...

வைகை said...

சௌந்தர் said...
நண்பா சிங்கப்பூரில் ஒரு பிளசாவுக்கு போனதை பற்றி சொல்லவே இல்ல///

ஒரு தடவ போனா சொல்லலாம்?!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Come to Vaigai blog. வைகை அண்ணன் பிகர் செட் பண்ணி தராராம்

//

யோவ் யோவ் என்னய்யா இது.. வைகை எவ்வளவு காசு குடுத்தாரு..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

சௌந்தர் said...
நண்பா சிங்கப்பூரில் ஒரு பிளசாவுக்கு போனதை பற்றி சொல்லவே இல்ல///

ஒரு தடவ போனா சொல்லலாம்?!!

//

வாடி என் செல்லம்.. நேத்தைக்கு போனத இங்கே செல்ல வேண்டாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

இந்த காப்பி பேஸ்ட் பண்ற பொழப்புக்கு... நாண்டு கிட்டு..#@%$@%^#%///

மாணவன் உன்னைத்தான் சொல்றான்

//

என்னமா ரூட்ட மாத்தறாங்க... வருங்காலத்தில கரடியோட கட்சியில சேர்ந்து பெரிய ஆளா வருவீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இந்த வருடம் ஜோதி ஒளிரட்டும்///

இது அந்த ஜோதியா இல்லை வேற ஜோதியா....

//

அந்த ஜோதிக்கு தான் கல்யாணம் ஆகிப்போச்சே.. இனி வேற ஜோதி தான்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

நல்லாதான் எழுதியிருக்கீங்க அப்படியே எனக்கும் இந்த டைரிகுறிப்ப எழுதிகொடுத்திடுங்க....ஹிஹி

நம்மள வேற தொடர்பதிவுக்கு கூப்புட்டுருக்காங்க... நாம என்னைக்கு டைரி எழுதியிருக்கோம்...

//

மானவா நான் எழுதினது என்னோட வாழ்க்கை வரலாறு... போப்பா போய் ஏதாவது எழுதுற வழிய பாரு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

கடைசி மாத சோகத்தில் ஒரு நிகழ்வை விட்டாச்சு? என்னையும் மாணவனையும் சந்திச்சத!!

//

அட ஆமாப்பா அந்த சோகத்த விட்டுட்டனே.. போனது பத்து பணமும் ஆச்சே...

ஆமினா said...

கடந்த கால நினைவுகள் ரொம்ப சுவையா இருந்துச்சு சகோ

வைகை said...

வெறும்பய said...
வைகை said...

சௌந்தர் said...
நண்பா சிங்கப்பூரில் ஒரு பிளசாவுக்கு போனதை பற்றி சொல்லவே இல்ல///

ஒரு தடவ போனா சொல்லலாம்?!!

//

வாடி என் செல்லம்.. நேத்தைக்கு போனத இங்கே செல்ல வேண்டாம்.////


மாமு என்னைய விட்டு போயிட்டு வந்திட்டியா?

மாணவன் said...

//அந்த ஜோதிக்கு தான் கல்யாணம் ஆகிப்போச்சே.. இனி வேற ஜோதி தான்...//

எல்லாம் புகழும் ஜோதிக்கே.......

அமுதா கிருஷ்ணா said...

nice post

ஜெயந்த் கிருஷ்ணா said...

dheva said...

அருமையான திரும்பிப் பார்க்கிறேன் தம்பி...

நான் பார்த்தவரைக்கும் வெறும்பயன்னு பேர வச்சுகிட்டு...எக்கச்சக்கா எழுதுற ஆளு நியாத்தான் இருப்ப...

சீராக உன்னோட எழுத்தின் நடையும் வசீகரமும் மாறியதை கண்கூடாக பார்த்தவன் நான். 100 வது போஸ்ட் மட்டும் இல்லப்பா.. இன்னும் நிறைய எழுதி எப்பவுமே ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்னு நீ........

வாழ்த்துக்கள் பா!

//

மிக்க நன்றி அண்ணா.. நீங்கள் முதல் பின்னூட்டமிட்டது மகிழ்ச்சி.. என்னை இன்று பலருக்கு தெரிகிறதென்றால் அதற்கு நீங்கள் தான் காரணம்.... வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி அண்ணா...

அன்புடன் நான் said...

வணக்கம் ....

கடந்த காலம் என்றதும்... நிறைய எதிர்பார்த்தேன்.... நீங்க போன வருடத்தை பற்றி மட்டும் எழுதியிருக்கிங்க.... நல்லாயிருக்கு....

விபத்தில் சிக்கிய நண்பன் மீண்டுவர கடவுளை வேண்டுகிறேன்....
இனி வரும் ஆண்டுகள் மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

வணக்கம் ....

கடந்த காலம் என்றதும்... நிறைய எதிர்பார்த்தேன்.... நீங்க போன வருடத்தை பற்றி மட்டும் எழுதியிருக்கிங்க.... நல்லாயிருக்கு....

விபத்தில் சிக்கிய நண்பன் மீண்டுவர கடவுளை வேண்டுகிறேன்....
இனி வரும் ஆண்டுகள் மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆமினா said...

கடந்த கால நினைவுகள் ரொம்ப சுவையா இருந்துச்சு சகோ

//

நன்றி சகோதரி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வைகை said...

மாமு என்னைய விட்டு போயிட்டு வந்திட்டியா?

//

விடு மாமு.. அடுத்த தடவை பார்க்கலாம்...

அன்புடன் நான் said...

நீங்க எழுதியிருப்பது... கடந்த கால நினைவுகள் அல்ல...
கடந்த ஆண்டு நினைவுகள்..... சரியா?????

அன்புடன் நான் said...

அந்த படம் மிக பொறுத்தம்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி. கருணாகரசு said...

வணக்கம் ....

கடந்த காலம் என்றதும்... நிறைய எதிர்பார்த்தேன்.... நீங்க போன வருடத்தை பற்றி மட்டும் எழுதியிருக்கிங்க.... நல்லாயிருக்கு....

விபத்தில் சிக்கிய நண்பன் மீண்டுவர கடவுளை வேண்டுகிறேன்....
இனி வரும் ஆண்டுகள் மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அண்ணா...

அன்புடன் நான் said...

அந்த படம் மிக பொறுத்தம்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி. கருணாகரசு said...

நீங்க எழுதியிருப்பது... கடந்த கால நினைவுகள் அல்ல...
கடந்த ஆண்டு நினைவுகள்..... சரியா?????

//

ஆமாம் அண்ணா.. இதோ மாற்றி விடுகிறேன்...

அருண் பிரசாத் said...

இரவும் பகலும்னு நீயே சொல்லிட்ட... அரி... ஜோதி போன என்ன சுவப்னா இருக்கால்ல...

அத மாதிரி போய்ட்டே இரு மச்சி..........

அருண் பிரசாத் said...

அட 50.....வடையா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் said...

இரவும் பகலும்னு நீயே சொல்லிட்ட... அரி... ஜோதி போன என்ன சுவப்னா இருக்கால்ல...

அத மாதிரி போய்ட்டே இரு மச்சி..........

//

நீ தத்துஞானி மச்சி.. கரக்டா புருஞ்சுகிட்டியே....

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி. கருணாகரசு said...

அந்த படம் மிக பொறுத்தம்.....

//

அந்த பெருமை நண்பர் எஸ்.கே வுக்கே பொருந்தும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அமுதா கிருஷ்ணா said...

nice post

//

நன்றி சகோதரி...

Unknown said...

மாற்றங்கள் ஒன்றே மாறாதது, இந்த வருடம் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் சார்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

இரவு வானம் said...

மாற்றங்கள் ஒன்றே மாறாதது, இந்த வருடம் மிக சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் சார்.

//

வருகைக்கு நன்றி சகோதரா...

Unknown said...

//கடந்த ஆண்டு நினைவுகள்...//
சந்தோசம் ----துக்கம் --அனுபவம்--
என்பவற்றை உணர்வுடன் எழுதியுள்ளீர்கள்.

Madhavan Srinivasagopalan said...

2010 டிசம்பர் மாதமென்பது உங்கள் வாழ்க்கையில் வந்திருக்க வேண்டாம்..
மற்ற மாதங்களாவது மகிழ்ச்சியாக இருந்ததே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

malgudi said...

//கடந்த ஆண்டு நினைவுகள்...//
சந்தோசம் ----துக்கம் --அனுபவம்--
என்பவற்றை உணர்வுடன் எழுதியுள்ளீர்கள்.

//

வருகைக்கு மிக்க நன்றி சகோதரா..

வருணன் said...

என் வாழ்விலும் வலைப்பூ பூத்தது சென்ற வருடத்தில் தான். நிச்சயமாக வாசிப்பது, அதுவும் எழுத்தாளர்களல்லாத நம்மைப் போல சக மனிதர்களின் மன ஓட்டங்களை வாசிப்பதென்பது ஒரு சுக அனுபவமே. கருத்தொற்றுமை கொண்ட இத்தனை இத்தனை ஆத்துமாக்களை நான் இங்கு சந்திப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை.

உங்கள் வாழ்வில் கடந்து சென்ற நல்ல தருணங்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் நம்மை சோகத்திலாழ்த்தும் துர்மரணங்கள் குறித்து எனது அனுதாபங்களை பதிவு செய்ய எனக்கு சஞ்சலமாகவே உள்ளது. ஏனெனில் ஆறுதலை வார்த்தைகளால் கூறுவது எளிது என்றுமே, வலியை நெஞ்சில் சுமந்து திரிவதை விட. நம்மிடமிருந்து விடை பெற்ற அத்தோழர்களின் ஆத்துமாக்கள் சாந்தி அடையட்டும். படுக்கையில் துயருறும் தங்களின் மற்றுமொரு நண்பர் அதிவிரைவில் நலமடைய என் பிராத்தனைகள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Madhavan Srinivasagopalan said...

2010 டிசம்பர் மாதமென்பது உங்கள் வாழ்க்கையில் வந்திருக்க வேண்டாம்..
மற்ற மாதங்களாவது மகிழ்ச்சியாக இருந்ததே..//


உண்மை தான் அந்த மாதமே வந்திருக்க வேண்டாம்ன்று தான் தோன்றியது...

Anonymous said...

வரும் வருடம் கடந்த கால சோகங்களை மறக்கச் செய்யும் நண்பா!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

வருணன் said...

என் வாழ்விலும் வலைப்பூ பூத்தது சென்ற வருடத்தில் தான். நிச்சயமாக வாசிப்பது, அதுவும் எழுத்தாளர்களல்லாத நம்மைப் போல சக மனிதர்களின் மன ஓட்டங்களை வாசிப்பதென்பது ஒரு சுக அனுபவமே. கருத்தொற்றுமை கொண்ட இத்தனை இத்தனை ஆத்துமாக்களை நான் இங்கு சந்திப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை.

உங்கள் வாழ்வில் கடந்து சென்ற நல்ல தருணங்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் நம்மை சோகத்திலாழ்த்தும் துர்மரணங்கள் குறித்து எனது அனுதாபங்களை பதிவு செய்ய எனக்கு சஞ்சலமாகவே உள்ளது. ஏனெனில் ஆறுதலை வார்த்தைகளால் கூறுவது எளிது என்றுமே, வலியை நெஞ்சில் சுமந்து திரிவதை விட. நம்மிடமிருந்து விடை பெற்ற அத்தோழர்களின் ஆத்துமாக்கள் சாந்தி அடையட்டும். படுக்கையில் துயருறும் தங்களின் மற்றுமொரு நண்பர் அதிவிரைவில் நலமடைய என் பிராத்தனைகள்...

//

உண்மை தான் நண்பரே.. நானறிந்து ஏராளமான நண்பர்களும் சகோதரர்களும் கடந்த வருடம் தான் வலைப்பூவை தொடங்கினார்கள்.. சொந்தோசம் துக்கம் போன்ற பல நிகழ்வுகள் பெரும்பாலும் அனைவரது வாழ்க்கையிலும் நடந்து கொண்டு தானிருக்கிறது.. ஆனால் சூழலும் காலமும் தான வேறாக இருக்கிறது...

எனது சந்தோங்களில் மட்டுமல்லாது துக்கங்களிலும் பங்கெடுக்கும் நல்ல நண்பர்கள் வரிசையில் நீங்களும் சேர்ந்துள்ளீர்கள் என்பதில் மிகவும் மகிழ்ச்சி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Balaji saravana said...

வரும் வருடம் கடந்த கால சோகங்களை மறக்கச் செய்யும் நண்பா!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

//

நம்புவோம்..

வாழ்த்திற்கு நன்றி நண்பரே..

எஸ்.கே said...

//படம் உதவி நண்பர் - எஸ்.கே //

எதுக்கு நண்பா இதெல்லாம்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

//படம் உதவி நண்பர் - எஸ்.கே //

எதுக்கு நண்பா இதெல்லாம்?

//

எனக்கு கிடைத்த ஒரு நல்ல நண்பருக்கு நான் சொல்லும் ஒரு சிறிய நன்றி...

எஸ்.கே said...

உங்கள் நட்பு கிடைத்ததில் நானும் மகிழ்கிறேன்!

எஸ்.கே said...

சோகங்கள் மறைந்து இனிமையான வாழ்வு இனி அமையட்டும்!

மாணவன் said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே, இந்த வருடன் பல இனிமையான நிகழ்வுகள் தொடர்ந்து சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.......

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.......:-)))))))

மாணவன் said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே, இந்த வருடன் பல இனிமையான நிகழ்வுகள் தொடர்ந்து சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.......

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.......:-)))))))

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

சோகங்கள் மறைந்து இனிமையான வாழ்வு இனி அமையட்டும்!

//

மிக்க நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே, இந்த வருடன் பல இனிமையான நிகழ்வுகள் தொடர்ந்து சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.......

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.......:-)))))))

.///

உன்னுடைய வாழ்த்துக்கு நன்றி தம்பி/....

நீ உன்னோட பொன்னான பணிய விடவே மாட்டியா...

ஆனந்தி.. said...

//அருமையான திரும்பிப் பார்க்கிறேன் தம்பி...

நான் பார்த்தவரைக்கும் வெறும்பயன்னு பேர வச்சுகிட்டு...எக்கச்சக்கா எழுதுற ஆளு நியாத்தான் இருப்ப...

சீராக உன்னோட எழுத்தின் நடையும் வசீகரமும் மாறியதை கண்கூடாக பார்த்தவன் நான். 100 வது போஸ்ட் மட்டும் இல்லப்பா.. இன்னும் நிறைய எழுதி எப்பவுமே ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்னு நீ........

வாழ்த்துக்கள் பா!//
சகோ தேவா சொன்னதை நானும் சொல்கிறேன்...அப்புறம் ஜோதி எல்லா பார்ட்டும் படிச்சேன்..நல்லா இருந்தது..:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுவராசியமான நினைவுகள், சோகமான இழப்புகளைச் சொல்லி மனதைக் கனக்க வைத்து விட்டாய் நண்பா.........! வரும் வருடம் வசந்தங்களை வாரி வழங்கட்டும்..........!

ஆனந்தி.. said...

இறந்து போன சகோதரன்...மற்றும் நண்பர்களின் இறப்புகளுக்கு என் வருத்தங்களை தெரிவிச்சுக்கிறேன்...இந்த வருடம் சந்தோஷமாய் இருக்க பிராத்திக்கிறேன்..ஹாப்பி பொங்கல்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆனந்தி.. said...
சகோ தேவா சொன்னதை நானும் சொல்கிறேன்...அப்புறம் ஜோதி எல்லா பார்ட்டும் படிச்சேன்..நல்லா இருந்தது..:)

//

மிக்க நன்றி சகோதரி...

ஜோதி அணைந்து விடவில்லை... இனியும் பிரகாசமாக ஒளிர்வாள்... ஹோடர்ந்து படியுங்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ...100 வேறயா.... குட்.........!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சுவராசியமான நினைவுகள், சோகமான இழப்புகளைச் சொல்லி மனதைக் கனக்க வைத்து விட்டாய் நண்பா.........! வரும் வருடம் வசந்தங்களை வாரி வழங்கட்டும்..........!

//

மிக்க நன்றி எல்லாம் தங்களுடைய நல்லாசியுடன் நடக்கட்டும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆனந்தி.. said...

இறந்து போன சகோதரன்...மற்றும் நண்பர்களின் இறப்புகளுக்கு என் வருத்தங்களை தெரிவிச்சுக்கிறேன்...இந்த வருடம் சந்தோஷமாய் இருக்க பிராத்திக்கிறேன்..ஹாப்பி பொங்கல்

//

தங்கள் வாக்கு பலிக்கட்டும்ம்.. உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓ...100 வேறயா.... குட்.........!

.//

அமாப்பு... எல்லாம் நீங்க குடுத்த உற்ச்சாகம் தான்..

Unknown said...

திரும்பி பார்கிறேன் - இடைவேளையில் நிற்கிறது கொஞ்சம் முடிச்சிட்டு போடுறது தானே..........

நல்லாத்தானே இருக்கு....

பதிவ போட்டுட்டு இப்படி கும்மிக்கிட்டு இருக்கீங்களே..........

தமிழ் பொண்ணு said...

அருமையான நினைவுகள்

எஸ்.கே said...

100, 150 என்ற எண்கள் ஒரு வகை மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது. ஆனால் எழுதியது எத்தனை இருந்தாலும் மனதில் நிறைந்துள்ள திருப்தியே நம் மனநிறைவை தீர்மானிக்கிறது. அந்த மனநிறைவு உங்களுக்கு இருக்கின்றது என நம்புகிறேன்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

விக்கி உலகம் said...

திரும்பி பார்கிறேன் - இடைவேளையில் நிற்கிறது கொஞ்சம் முடிச்சிட்டு போடுறது தானே..........

நல்லாத்தானே இருக்கு....

பதிவ போட்டுட்டு இப்படி கும்மிக்கிட்டு இருக்கீங்களே..........

//

வருகைக்கு மிக்க நன்றி சகோதரா...
இடையில் நிற்கிறது என்று நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை..

வெறுமனமே வரும் template பின்னூட்டங்களை விட அன்பாகவும் அதட்டலாகவும், அதிகாரமாகவும், அரவணைப்போடும் வரும் பின்னூட்டங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.. இங்கே இருக்கும் பொது கவலைகள் மறந்து சிறு பிள்ளை தனமாக மாறி விடுகிறது மனது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மதுரை பொண்ணு said...

அருமையான நினைவுகள்

//

வருகைக்கு நன்றி தோழி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

எஸ்.கே said...

100, 150 என்ற எண்கள் ஒரு வகை மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது. ஆனால் எழுதியது எத்தனை இருந்தாலும் மனதில் நிறைந்துள்ள திருப்தியே நம் மனநிறைவை தீர்மானிக்கிறது. அந்த மனநிறைவு உங்களுக்கு இருக்கின்றது என நம்புகிறேன்!

//

உண்மை தான் நண்பரே.. நான் இதுவரை எழுதியது யாருக்காவது எந்த விதத்திலாவது உதவியிருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால் எனக்கு உங்களை போன்ற நல்ல நண்பர்களை எனக்கு கொடுத்துள்ளது..அதுவே போதும்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

படிக்கும்போதே மனது கனக்கிறது...
2011 இல் சோகங்கள் மறைந்து இனிமையான வாழ்வு அமைய இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன் சகோதரா... 100வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தோழி பிரஷா said...

படிக்கும்போதே மனது கனக்கிறது...
2011 இல் சோகங்கள் மறைந்து இனிமையான வாழ்வு அமைய இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன் சகோதரா... 100வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்..

//

வாழ்த்திற்கு நன்றி சகோதரி..

Anonymous said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!!

வரும் வருடம் கடந்த கால சோகங்களை மறக்கச் செய்யும் சகோதரா!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் , இந்த வருடன் பல இனிமையான நிகழ்வுகள் தொடர்ந்து சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.......

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.......:-)))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!!

வரும் வருடம் கடந்த கால சோகங்களை மறக்கச் செய்யும் !!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறுமனமே வரும் template பின்னூட்டங்களை விட அன்பாகவும் அதட்டலாகவும், அதிகாரமாகவும், அரவணைப்போடும் வரும் பின்னூட்டங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.. இங்கே இருக்கும் பொது கவலைகள் மறந்து சிறு பிள்ளை தனமாக மாறி விடுகிறது மனது...//

ஏழு கழுதை வயசாச்சு சிறு பிள்ளை தனமாக மாறி விடுகிறதா உனக்கு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100, 150 என்ற எண்கள் ஒரு வகை மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது. ஆனால் எழுதியது எத்தனை இருந்தாலும் மனதில் நிறைந்துள்ள திருப்தியே நம் மனநிறைவை தீர்மானிக்கிறது. அந்த மனநிறைவு உங்களுக்கு இருக்கின்றது என நம்புகிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100, 150,175,200, 2225,250,275,300,325,350,375,400,425,450,475,500 என்ற எண்கள் ஒரு வகை மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது. ஆனால் எழுதியது எத்தனை இருந்தாலும் மனதில் நிறைந்துள்ள திருப்தியே நம் மனநிறைவை தீர்மானிக்கிறது. அந்த மனநிறைவு உங்களுக்கு இருக்கின்றது என நம்புகிறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓ...100 வேறயா.... குட்.........!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜோதி அணைந்து விடவில்லை... இனியும் பிரகாசமாக ஒளிர்வாள்... ஹோடர்ந்து படியுங்கள்... ///

ஒளிர்வாள்-இது என்ன கூர்மையான வாளா?

ஹோடர்ந்து ? இதற்கு விளக்கம் தரவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இப்ப நான் என்ன செய்ய?

ஜெயந்த் கிருஷ்ணா said...

யோவ் என்னய்யா நடக்குது இங்கே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அஞ்சலியிடம் சில்மிஷம் செய்த ரசிகர்கள் மீது பாய்ந்து பளார் பளார் என அறைவிட்டார் புதிய இயக்குநர்.

துரை தயாநிதி அழகிரி, விவேக் ரத்னவேல் ஆகிய இருவரும் இணைந்து 'கிளவுட் நைன் மூவீஸ்' சார்பில், 'தூங்கா நகரம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில், விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கதாநாயகன் விமலின் நண்பர்களில் ஒருவராக நடிப்பதுடன், படத்தை இயக்குகிறார், கவுரவ். இவர், கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர்.

'தூங்கா நகரம்' படத்தின் படப்பிடிப்பு, மதுரை பஸ்நிலையத்தில் நடந்தது. விமல்- அஞ்சலியுடன், சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 500 துணை நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சியை கவுரவ் படமாக்கிக்கொண்டிருந்தார்.

படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்கு, கட்டுக்கடங்காத அளவில் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தார்கள். அவர்கள் அப்படியே படப்பிடிப்புக் குழுவை சூழந்துகொண்டனர்.

அப்போது சில இளைஞர்கள் கும்பலாக வந்து, அஞ்சலியை சூழ்ந்து கொண்டனர். அவரை அப்படியே கைகளை நீட்டி கட்டிப் பிடிப்பது போல நெருக்க, அஞ்சலி அலற ஆரம்பித்த்தார். உடனே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. நிலைமை கைமீறியது. சில ரசிகர்கள், அஞ்சலியின் கையைப்பிடித்து இழுத்தனர். சிலர் மேலே விழுவது போல வந்தனர். இதனால் கடுப்பான இயக்குநர் கவுரவ் அந்த ரசிகர்கள் மீது பாய்ந்து 'பளார்...பளார்' என அவர்களின் கன்னத்தில் அறைந்து, வெளியேற்றினார்.

அடிவாங்கிய ரசிகர்கள், 'நாங்க மதுரைக்காரர்கள். எங்கள் மேலயா கை வைக்கிறே?' என்று மிரட்டினார்கள். உடனே கவுரவ், 'நான் மட்டுமல்ல, இந்தப் படமே மதுரைக்காரங்க படம்டா' என்றாராம். அதற்குள் போலீசார் வந்துவிட இளைஞர்கள் பறந்தனர், கன்னத்தைத் தடவியபடி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இப்ப நான் என்ன செய்ய?

//

தனியாளா நின்னு போட்டு தள்ளிட்டு இப்ப என்ன செய்யவா,...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு [^] திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் [^] ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளினை ஏற்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை அரசு விடுமுறையானதால் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம்.

மேலும் தமிழக அரசின் அரசாணையின்படி வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம்.

அதுபோல் நடமாடும் திரையரங்குகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மேட்னி காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் மற்றும் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை காலை காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் அரசாணை மூலம் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன் கூட்டியே இதுபற்றிய தகவல் தெரிவித்து விட்டு அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரி விக்கப்பட்டு உள்ளது.

எனவே தமிழக அரசின் அரசாணைப்படி அதிகப்படியான காட்சிகள் அதாவது ஐந்தாவது காட்சிகள் நடத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

யோவ் என்னய்யா நடக்குது இங்கே...//

நீ இன்னும் தூங்கலியா

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னய்யா நடக்குது இங்கே.. சினிமா கிசு கிசுவா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சினிமா நடிகை ஷோபனா தற்கொலை. வெறும்பய கவலை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

யோவ் என்னய்யா நடக்குது இங்கே...//

நீ இன்னும் தூங்கலியா

//

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு தல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இப்ப நான் என்ன செய்ய?

//

தனியாளா நின்னு போட்டு தள்ளிட்டு இப்ப என்ன செய்யவா,...///

செல்வா இல்லாத நேரம்தான் வடை வாங்க முடியுது. போறம்la உனக்காக சில படங்கள் டெடிகேட் பண்ணிருக்கேன். பாரு

ஜெயந்த் கிருஷ்ணா said...

மேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சினிமா நடிகை ஷோபனா தற்கொலை. வெறும்பய கவலை...

//

நல்ல காலம் தற்கொலைக்கு நான் தான் காரணமுன்னு சொல்லலையே....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

யோவ் என்னய்யா நடக்குது இங்கே...//

நீ இன்னும் தூங்கலியா

//

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு தல...//


சரி வைகை கிட்ட எனக்கு கிப்ட் எல்லாம் வாங்கி கொடுத்து விடு

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இப்ப நான் என்ன செய்ய?

//

தனியாளா நின்னு போட்டு தள்ளிட்டு இப்ப என்ன செய்யவா,...///

செல்வா இல்லாத நேரம்தான் வடை வாங்க முடியுது. போறம்la உனக்காக சில படங்கள் டெடிகேட் பண்ணிருக்கேன். பாரு

//
பார்த்தேன் பார்த்தேன்.. ஆமா யாரு இதெல்லாம் நம்ம பன்னிகுட்டி கையிலுள்ள சிட்டுகளா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெறும்பய said...

யோவ் என்னய்யா நடக்குது இங்கே...//

நீ இன்னும் தூங்கலியா

//

இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு தல...//


சரி வைகை கிட்ட எனக்கு கிப்ட் எல்லாம் வாங்கி கொடுத்து விடு

//

ரெண்டு லக்கி பிளாசா வாங்கி குடுக்கவா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பார்த்தேன் பார்த்தேன்.. ஆமா யாரு இதெல்லாம் நம்ம பன்னிகுட்டி கையிலுள்ள சிட்டுகளா...//

Yes. Fresher. Do u need?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரெண்டு லக்கி பிளாசா வாங்கி குடுக்கவா...//

அது எவனுக்கு வேணும் ரெண்டு சீனா பொண்ணுங்களை அனுப்பி விடு. ஹிஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

கல்பனா said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!!

வரும் வருடம் கடந்த கால சோகங்களை மறக்கச் செய்யும் சகோதரா!!!!

//

வாழ்த்திற்கு நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பார்த்தேன் பார்த்தேன்.. ஆமா யாரு இதெல்லாம் நம்ம பன்னிகுட்டி கையிலுள்ள சிட்டுகளா...//

Yes. Fresher. Do u need?

//

வேணாம் வேணாம்.. டேரருக்கு தள்ளி விடு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேணாம் வேணாம்.. டேரருக்கு தள்ளி விடு...//

mm. good night

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேணாம் வேணாம்.. டேரருக்கு தள்ளி விடு...//

mm. good night

//

good night


கனவுல பேய், பிசாசு, குட்டிசாத்தான் , காட்டேரி, மோகினி பிசாசு எல்லாம் வந்து தாலாட்டு பாடி தூங்க வைக்கட்டும்...

மாணவன் said...

ஆஹா ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்களே...

நடத்துங்க நடத்துங்க.....

மாணவன் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரெண்டு லக்கி பிளாசா வாங்கி குடுக்கவா...//

அது எவனுக்கு வேணும் ரெண்டு சீனா பொண்ணுங்களை அனுப்பி விடு. ஹி///

என்ன நடக்குது இங்க பிச்சுபுடுவேன் பிச்சு..........

பொன் மாலை பொழுது said...

அய்யய்யோ நா தான் லேட்டா?

மாணவன் said...

ஓகே அண்ணே குட் நைட்.... காலையில் பார்ப்போம்.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

ஆஹா ஆட்டத்த ஆரம்பிச்சுட்டாங்களே...

நடத்துங்க நடத்துங்க.....

//

வாடா நல்லவனே என்ன lete போலீஸ் கோவிச்சுகிட்டு போயிட்டாரு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

மாணவன் said...

ஓகே அண்ணே குட் நைட்.... காலையில் பார்ப்போம்..

//

good night


கனவுல பேய், பிசாசு, குட்டிசாத்தான் , காட்டேரி, மோகினி பிசாசு எல்லாம் வந்து தாலாட்டு பாடி தூங்க வைக்கட்டும்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கக்கு - மாணிக்கம் said...

அய்யய்யோ நா தான் லேட்டா?

//

வாங்கன்னே... கொஞ்சம் லேட் தான்

தினேஷ்குமார் said...

அண்ணே கொஞ்சம் நானும் லேட்

தங்கள் கடந்த ஆண்டுநினைவுகளில் மூழ்கிபோனேன் கடை வரிகளில் சோகம் சுமந்த நினைவுகளில் உங்களுடன் நாங்களும்.....

இவ்வாண்டு தங்களுக்கு சிறப்பாய் அமைய வேண்டும்....
வேண்டுவனவெல்லாம் கிடைபதுமில்லை
கிடைப்பதெல்லாம் நாம் வேண்டுவதுமில்லை
அவனமைத்த பாதையில் தடம்மாறாமல் பயணிப்பது மேல்....

வைகை said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

வைகை said...

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் , இந்த வருடன் பல இனிமையான நிகழ்வுகள் தொடர்ந்து சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.......

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி.......:-))))))

வைகை said...

ஜோதி அணைந்து விடவில்லை... இனியும் பிரகாசமாக ஒளிர்வாள்... ஹோடர்ந்து படியுங்கள்... ///

ஒளிர்வாள்-இது என்ன கூர்மையான வாளா?

ஹோடர்ந்து ? இதற்கு விளக்கம் தரவு

வைகை said...

'தூங்கா நகரம்' படத்தின் படப்பிடிப்பு, மதுரை பஸ்நிலையத்தில் நடந்தது. விமல்- அஞ்சலியுடன், சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த 500 துணை நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சியை கவுரவ் படமாக்கிக்கொண்டிருந்தார்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எளிமையாக நினைவு கூர்ந்த விதம் பிடிச்சிருக்கு..
உங்க இழப்பிற்கு, வருந்துகிறேன்..
உங்க சந்தோஷ தருணங்களையும், வருந்தும் தருணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்..
உங்க நட்பிற்கு நன்றி..

மென்மேலும் எழுதி, வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்..!

வைகை said...

சரி வைகை கிட்ட எனக்கு கிப்ட் எல்லாம் வாங்கி கொடுத்து விடு

//

ரெண்டு லக்கி பிளாசா வாங்கி குடுக்கவா..////////



Hey......talking about which topic?
i don't know...........

ராமலக்ஷ்மி said...

இழப்புகளைக் காலம் ஆற்றட்டும். உற்றவர் ஆறுதல் பெற பிரார்த்தனைகள்.

வாசிப்பைத் தொடருங்கள். நல்ல பகிர்வு.

Chitra said...

May their souls rest in peace. May the Lord's comfort and strength fill your heart.

NaSo said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மச்சி!!!

சுசி said...

// சராசரி மனிதனான காரணத்தால் இழப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத அடுத்து வரும் வருடங்களை எதிர்பார்த்துக் கொண்டு இந்த நாட்குறிப்பு முற்று பெறுகிறது.//

சந்தோஷமான வருஷமா இருக்கட்டும் ஜெயந்த்.

ம.தி.சுதா said...

நல்லதொரு அனுபவத்தை பகிர்ந்துள்ளிர்கள் நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்த வலைப்பூ. "வெறும்பய" என்ற பெயரை தேர்வு செய்வதற்கே கிட்ட தட்ட ஒரு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்..
//

ஓ.. பரவாயில்லையே.. ரொம்ப துடிப்பாத்தான் இருக்கீக..!!!


ஏண்ணே..நீங்க, காலையில டிபன் சாப்பிட ஆரம்பிச்சா, அன்னைக்கே முடிப்பீங்களா.. இல்லை இரவு சிற்றுண்டி வரைக்கும் இழுப்பீங்களா?..
இது நான் கேட்கலே.. கோமாளி என்னைவிட்டு , உங்களிடம் கேட்கச்சொன்னார்..
ஹி..ஹி

கவி அழகன் said...

கடந்த வருடத்தில் நடந்த மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் அண்ணனின் கல்யாணம் தான். கிடைத்த ஆறு நாள் விடுமுறையில் பத்திரிக்கை வைப்பது முதல் அனைத்து வேலைகளையும் முன் நின்று நானே பார்த்துக்கொண்டதால் உடலளவில் சில இடையூறுகள் வந்தாலும் மனதளவில் நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம். எங்கள் வீட்டில் நடந்த முதல் விசேஷம். அது மட்டுமல்லாமல் சுமார் பத்து வருடங்களுக்கு பின் குடும்பத்திலுள்ள சொந்த பந்தங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கிடைத்த வாய்ப்பு இது. சிறு வயதில் பார்த்து பயந்த அண்ணன்கள் மற்றும் உறவுகள் அனைவரும் அன்றைய தினத்தில் நண்பர்களாய் தெரிந்தார்கள்.. எப்போதும் ஆயிரம் பொய்கள் சொல்லி வருடத்திற்கொரு முறை ஊருக்கு வரும் நான் கடந்த வருடம் தான் இன்னும் கொஞ்சம் அதிகமான பொய்கள் சொல்லி இரண்டு முறை இந்தியா வந்தேன்.

மனச ரொம்ப தொட்டிட்டு

சசிகுமார் said...

138 கமெண்ட்டை தாண்டி நம் கமென்ட் தெரியவா போகிறது. இருந்தாலும் சொல்லிவிடுவோம் வாழ்த்துக்கள் நண்பா. பதிவுலகில் என் நண்பர்களின் பட்டியலில் முக்கியமானவர் தாங்கள்.

Mathi said...

congrats for ur 100 th post !!!

'பரிவை' சே.குமார் said...

அருமையான திரும்பிப் பார்க்கிறேன்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Dhanalakshmi said...

migavum azhagan ninaivugal........

Sriakila said...

இந்தப் பதிவின் மூலம்தான் ஜெயந்தோட வரலாற முழுசாத் தெரிஞ்சிக்கிட்டேன்.

மகிழ்ச்சியும், சோகமும் கலந்த உங்கள் கடந்த கால அனுபவங்களில் மரண செய்திகள் தான் வருந்தக்கூடியவை.

இந்த வருடம் ஜோதியாக ஜொலித்து, ஸ்வப்னமாக முடிய வாழ்த்துக்கள்!

Unknown said...

துன்பங்களை குறித்து வருத்தம் வேண்டாம் சகோ...

இனி வரும் காலம் உங்களுக்கு நல்லதையே கொடுக்கும்..

vinu said...

100 notooutukku vaalthukkal

Harini Resh said...

கடந்த கால நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்

அன்புடன் நான் said...

தலைப்பை மாற்றியமைக்கு மிக்க நன்றி...


உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Geetha6 said...

அருமை

தேசாந்திரி-பழமை விரும்பி said...

சில நினைவுகள் சாதாரணம்...
சில நினைவுகள் சதா ரணம் !
(நன்றி - 'பொக்கிஷம்' சேரன் )

படங்கள் அருமை !

Anonymous said...

பதிவே டைரிமாதிரி ஆகிப்போச்சுங்க..

மங்குனி அமைச்சர் said...

இறப்புக்கள் மனதுக்கு மிக்க வலியை தரும் ......... மன்னியுங்கள்

காலம் அதற்க்கு நல்ல மருந்து

ஆர்வா said...

எல்லாவற்றையும் மறந்து புத்தாண்டில் புதிதாக வாழ தொடங்குங்கள் நண்பா.. பொங்கல் வாழ்த்துக்கள்

r.v.saravanan said...

மகிழ்ச்சியும், சோகமும் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்

வரும் காலம் உங்களுக்கு நல்லதை கொடுக்கும்.

100வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்

செல்வா said...

//தான் இந்த வலைப்பூ. "வெறும்பய" என்ற பெயரை தேர்வு செய்வதற்கே கிட்ட தட்ட ஒரு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்..//

இதுக்கே ஒரு மாசம் ஆச்சா ?

செல்வா said...

/ஆனால் சமீபக் காலமாக எல்லாம் மாறி வருகிறது, பதிவுலகில் நல்ல பதிவுகளை தேடிப்படிப்பதொடு மட்டுமல்லாமல் புத்தகங்கள் தேடி நூலகங்களுக்கும் செல்லும் நிலை வந்துவிட்டது//

ஹி ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

தினேஷ்குமார் said...

அண்ணே கொஞ்சம் நானும் லேட்

தங்கள் கடந்த ஆண்டுநினைவுகளில் மூழ்கிபோனேன் கடை வரிகளில் சோகம் சுமந்த நினைவுகளில் உங்களுடன் நாங்களும்.....

இவ்வாண்டு தங்களுக்கு சிறப்பாய் அமைய வேண்டும்....
வேண்டுவனவெல்லாம் கிடைபதுமில்லை
கிடைப்பதெல்லாம் நாம் வேண்டுவதுமில்லை
அவனமைத்த பாதையில் தடம்மாறாமல் பயணிப்பது மேல்....

//

மிக்க நன்றி நண்பரே...

ஜெயந்த் கிருஷ்ணா said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எளிமையாக நினைவு கூர்ந்த விதம் பிடிச்சிருக்கு..
உங்க இழப்பிற்கு, வருந்துகிறேன்..
உங்க சந்தோஷ தருணங்களையும், வருந்தும் தருணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்..
உங்க நட்பிற்கு நன்றி..

மென்மேலும் எழுதி, வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்..!

//

தங்களுடைய வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ராமலக்ஷ்மி said...

இழப்புகளைக் காலம் ஆற்றட்டும். உற்றவர் ஆறுதல் பெற பிரார்த்தனைகள்.

வாசிப்பைத் தொடருங்கள். நல்ல பகிர்வு.

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Chitra said...

May their souls rest in peace. May the Lord's comfort and strength fill your heart.

//

நன்றி சகோதரி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நாகராஜசோழன் MA said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மச்சி!!!

//

நன்றி தலைவா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுசி said...

// சராசரி மனிதனான காரணத்தால் இழப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத அடுத்து வரும் வருடங்களை எதிர்பார்த்துக் கொண்டு இந்த நாட்குறிப்பு முற்று பெறுகிறது.//

சந்தோஷமான வருஷமா இருக்கட்டும் ஜெயந்த்.

//

நன்றி சகோதரி.. சந்தோசமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை..

ஜெயந்த் கிருஷ்ணா said...

ம.தி.சுதா said...

நல்லதொரு அனுபவத்தை பகிர்ந்துள்ளிர்கள் நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

//

வருகைக்கு நன்றி சகோதரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

பட்டாபட்டி.... said...

இந்த வலைப்பூ. "வெறும்பய" என்ற பெயரை தேர்வு செய்வதற்கே கிட்ட தட்ட ஒரு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்..
//

ஓ.. பரவாயில்லையே.. ரொம்ப துடிப்பாத்தான் இருக்கீக..!!!


ஏண்ணே..நீங்க, காலையில டிபன் சாப்பிட ஆரம்பிச்சா, அன்னைக்கே முடிப்பீங்களா.. இல்லை இரவு சிற்றுண்டி வரைக்கும் இழுப்பீங்களா?..
இது நான் கேட்கலே.. கோமாளி என்னைவிட்டு , உங்களிடம் கேட்கச்சொன்னார்..
ஹி..ஹி \


//

ஹா ஹா எனக்கு தெரியும் தலைவா நீ இப்படியெல்லாம் கேப்பேன்னு... என்ன இருந்தாலும் நீ என்னோட குருவாச்சே... நீயே தைரியமா கேக்கலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

யாதவன் said...

மனச ரொம்ப தொட்டிட்டு

//

வருகைக்கு நன்றி சகோதரா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சசிகுமார் said...

138 கமெண்ட்டை தாண்டி நம் கமென்ட் தெரியவா போகிறது. இருந்தாலும் சொல்லிவிடுவோம் வாழ்த்துக்கள் நண்பா. பதிவுலகில் என் நண்பர்களின் பட்டியலில் முக்கியமானவர் தாங்கள்.

//

என்ன நண்பரே இப்படி சொல்லிவிட்டீர்கள் நீங்கள் எப்போது வந்தாலும் உங்களுக்காக் நான் காத்திருப்பேன்.. என் நண்பர்கள் பட்டியலிலும் நீங்கள் முதன்மையானவர் தான்....

நீ எப்போ வேணுமின்னாலும் வரலாம்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Mathi said...

congrats for ur 100 th post !!! \

//

Thanks Mathi..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சே.குமார் said...

அருமையான திரும்பிப் பார்க்கிறேன்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

//

மிக்க நன்றி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

gunalakshmi said...

migavum azhagan ninaivugal........
\
//


மிக்க நன்றி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜெ.ஜெ said...

துன்பங்களை குறித்து வருத்தம் வேண்டாம் சகோ...

இனி வரும் காலம் உங்களுக்கு நல்லதையே கொடுக்கும்..

//

நன்றி சகோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

vinu said...

100 notooutukku vaalthukkal

//

Thanks Vinu..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Harini Nathan said...

கடந்த கால நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்

//

நன்றி தோழி..

ஜெயந்த் கிருஷ்ணா said...

சி. கருணாகரசு said...

தலைப்பை மாற்றியமைக்கு மிக்க நன்றி...


உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

//

நீங்க சொல்லி கேட்க்காமல் இருப்பேனா..
உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா..

ஜெயந்த் கிருஷ்ணா said...

Geetha6 said...

அருமை

//

நன்றி சகோ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தேசாந்திரி-பழமை விரும்பி said...

சில நினைவுகள் சாதாரணம்...
சில நினைவுகள் சதா ரணம் !
(நன்றி - 'பொக்கிஷம்' சேரன் )

படங்கள் அருமை !

//\


தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

ஜெயந்த் கிருஷ்ணா said...

Anonymous said...

பதிவே டைரிமாதிரி ஆகிப்போச்சுங்க..

//

பெரும்பாலும் அப்படி தான்.. வருகைக்கு நன்றி ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

மங்குனி அமைச்சர் said...

இறப்புக்கள் மனதுக்கு மிக்க வலியை தரும் ......... மன்னியுங்கள்

காலம் அதற்க்கு நல்ல மருந்து

//

அதுவும் வாழ்வில் வது போகும் ஒரு அங்கம் தானே.. தங்கள் வருகைக்கு நன்றி அமைச்சரே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

கவிதை காதலன் said...

எல்லாவற்றையும் மறந்து புத்தாண்டில் புதிதாக வாழ தொடங்குங்கள் நண்பா.. பொங்கல் வாழ்த்துக்கள்

//

நிச்சயமாக நண்பரே.. உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

r.v.saravanan said...

மகிழ்ச்சியும், சோகமும் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்

வரும் காலம் உங்களுக்கு நல்லதை கொடுக்கும்.

100வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்

//

மிக்க நன்றி சகோதரா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

கோமாளி செல்வா said...

//

செல்வா நீ வந்ததுக்கு உனக்கு தனியா நன்றி சொல்லனுமா..

Jaleela Kamal said...

உங்கள் பகிர்வு அருமை.
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஜோதி கடைசி பாகம் படித்தேன் ம், ரொம்ப அருமை பிளாஷ் பேக் குடன் சூபப்ரா போட்டு இருக்கீங்க , பிறகு நேரம் கிடைக்கும் போது முழுவதும் படிக்கிறேன்.